பீரோவில் மறந்தும் கூட பணத்தை இப்படி வைத்து வீடாதீர்கள்! பணம் வீண் செலவாகி கொண்டே இருக்கும்!

- Advertisement -

முன்பெல்லாம் வீடுகளில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை பத்திரப்படுத்துவதற்காக நம் வீட்டில் இருக்கும் பீரோ அல்லது பணம் வைப்பதற்கு என்று பண பெட்டியை பயன்படுத்துவோம். ஆனால் இந்த நவீன காலத்தில் என்ன தான் வங்கிகளில் நாம் பணத்தை போட்டு வைத்திருந்தாலும் நம் வீட்டில் அன்றாட செலவுக்காக சிறிய குறிப்பிட்ட தொகையை பணத்தை எப்போதும் வீட்டில் வைத்திருப்போம் அதை நம் வீட்டில் பெரும்பாலும் பீரோவில் தான் வைத்திருப்போம் நீங்கள் அப்படி பீரோவில் வைக்கும் பணத்தை தவறுதலாக இப்படி வைத்து விட்டால் உங்கள் வீட்டில் பணம் என்பது சேரவே சேராது மேலும் பணம் வீண் செலவாகி கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

தேக்கு பீரோ

ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கென்று பெரிய செலவுகள் வந்து கொண்டே தான் இருக்கும் அதனால் உங்கள் வீட்டு பீரோவில் பணத்தை எப்படி வைக்க வேண்டும் எப்படி வைத்தால் பணம் பெருகும் என்பதை தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காண உள்ளோம். பொதுவாக பணத்தைப் மரத்தினாலான பொருள்களின் மீது தான் வைக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலோனார் பயன்படுத்தும் பீரோ இரும்பு பீரோ தான். நீங்கள் இரும்பு பீரோவை விட மர பீரோவை பயன்படுத்தும் பொழுது உங்கள் வீட்டில் பணம் என்பது அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்கும் அதிலும் தேக்கு மர பீரோ பயன்படுத்தினால் உங்கள் பீரோவில் வைக்கும் பணத்தை தேக்கி கொண்டே இருக்கும்.

- Advertisement -

சனி பகவான்

ஆனால் நாம் இரும்பு பீரோக்கள் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இரும்பு பீரோக்கள் பயன்படுத்துவதால் உங்களுக்கு என்ன பாதிப்பு தெரியுமா இரும்பு என்பது சனி பகவானுடைய ஆதிக்கம் பெற்ற ஒரு உலோகம் இது உங்களுக்கு எல்லா நேரங்களிலும் நன்மையை பெற்று தராது. அதனால் நீங்கள் உங்கள் வீட்டில் பணத்தை நேரடியாக இரும்பு பீரோவில் வைத்து புழங்க கூடாது முதலில் பீரோவை வடக்கு திசையை பார்த்தவாறு வைத்துவிட்டு. பின் பணம் நீங்கள் வைத்து எடுக்கும் இடத்தில் ஒரு சிறிய அளவு மரப்பலகை அல்லது மரத்தினால் செய்யப்பட்ட கிண்ணம் ஏதாவது ஒன்றை வைத்து அதன் மீது நீங்கள் பணத்தை வைத்து எடுக்கலாம். மேலும் நீங்கள் பணம் வைத்திருக்கும் மரக்கட்டையின் அருகே ஒரு கண்ணாடி வைத்து அந்த கண்ணாடியில் பிம்பம் தெரியும்படி வடக்கு திசை பார்த்தவாறு வைக்கும்போது. உங்கள் வீட்டில் உள்ள பணம் வீண் செலவாவது தடுக்கப்பட்டு உங்கள் வீட்டில் பணமானது பெருகிக்கொண்டே இருக்கும்.

இதை மட்டும் செய்யாதீர்கள்

நாம் வீட்டில் வைத்திருக்கும் பீரோவின் கதவில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றனர். அதை ஆகையால் உங்கள் வீட்டில் இருக்கும் பீரோவின் கதவுகளை அடிக்கடி ஆட்டி பார்க்க கூடாது. மேலும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக இது போன்ற அடிக்கடி கதவை திறந்து மூடுவது போன்ற செயல்களில் ஈடுபடும்போது உங்களுடைய வீட்டின் பொருளாதரமே பாதிக்கப்படும். ஆகையால் உங்கள் வீட்டு பீரோவை குழந்தைகள் அடிக்கடி திறந்து பார்க்காதவாறு சாவி போட்டு பூட்டி வையுங்கள்.

இந்த பொருட்களை வைக்காதீர்கள்

மேலும் பீரோவில் எக்காரணம் கொண்டும் இந்த இரண்டு பொருட்கள் இருக்கவே கூடாது. ஆம் இரும்பு மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்ட எந்த பொருட்களையும் பீரோக்குள் வைக்க கூடாது இவை உங்கள் வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வரும். மேலும் உங்கள் வீட்டு பீரோவில் மகாலட்சுமி வாசம் செய்வதால் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வாசனை மிகுந்த பொருட்களை வைக்கலாம். அதாவது கிராம்பு, பட்டை, ஏலக்காய், ஜவ்வாது போன்ற பொருட்களை ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கும் போது உங்கள் வீட்டு பீரோவில் ஒரு தெய்வீக சக்தி நிறைந்திருக்கும்.

-விளம்பரம்-

பீரோ சுத்தமாக இருக்க வேண்டும்

மேலும் உங்கள் வீட்டு பீரோவை எப்பொழுதும் சுத்த பத்தமாக வைத்திருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பீரோவின் மேல் பகுதி, பின் பகுதியில் தூசிகள் சேர விடக்கூடாது. தூசிகள் சேரும் வண்ணம் அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் பீரோவில் மூதேவி வந்து தங்கி விடுவாள். அதன் பிறகு உங்கள் வீட்டின் பொருளாதாரம் நிலையாக இருக்காது மேலும் உங்கள் வீட்டு பீரோவில் இருக்கும் துணிகளை சரியான முறையில் அடுக்கி வைக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் கஜலட்சுமி பச்சை நிற புடவை கட்டி இரண்டு புறங்களும் யானை நிற்கும் அமைப்பிலான படங்களை உங்கள் வீட்டு பீரோவில் ஒட்டி வைத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் பணம் வீண் விரயம் ஆவது தடுக்கப்பட்டு பணம் சேர்ந்து கொண்டே தான் இருக்கும்