- Prep
- 15 min
- Cook
- 20 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, chutney, dinner
பாம்பே சட்னி எளிதாகவும் விரைவாகவும் சமைக்கக்கூடியது. பூரி, சப்பாத்தி, இட்லி மற்றும் தோசைக்கு பாம்பே சட்னி ஒரு சிறந்த சைட் டிஷ் ஆகும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பாம்பே சட்னி செய்து
இதையும் படியுங்கள்: இட்லி தோசைக்கு ஏற்ற மதுரை மல்லி சட்னி இப்படி செஞ்சி பாருங்க!
சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பாம்பே சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
பாம்பே சட்னி செய்ய முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் தாளிக்க என்பதன் கீழ் பட்டியலிடப் பட்டுள்ள பொருட்களைச் சேர்த்து, அது தெறிக்கட்டும், பின்னர் வெங்காயத்தை உப்புடன் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்க்கவும்.
அதன் மெல்லிய மற்றும் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். அதன் பின்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விடவும். பிறகு கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடவும்.
அதன் பின்பு 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும், பின் குறைந்த தீயில் சில நிமிடங்கள் கடாயை மூடி வைக்கவும். பின் கடலை மாவு கெட்டியாகவும் மற்றும் பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி விடவும்.
இறுதியாக கொத்தமல்லி தூவி அணைக்கவும். அவ்வளவு தான் பாம்பே சட்னியை இட்லி தோசை அல்லது சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.






