எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சாப்பிடனுனு செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று மல்லி சட்னி ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திருப்பார்கள். வீட்டில் அதே சுவையில் செய்து ருசித்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே சுலபமாக ஹோட்டல் மல்லி சட்னி
இதையும் படியுங்கள்: கிராமத்து ஸ்டைல் கோவைக்காய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!
எப்படி செய்யலாம் என்றுதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மல்லி சட்னி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.அதனால் இன்று இந்த மல்லி சட்னி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மதுரை மல்லி சட்னி | Malli Chutney Recipe in Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 tbsp நல்லெண்ணெய்
- 1 tsp மல்லி
- 1 tsp உளுத்தம் பருப்பு
- 1 tsp பூண்டு
- 10 கருவேப்பிலை
- 4 மிளகாய் வற்றல்
- 1 சின்ன வெங்காயம்
- 1 cup துருவிய தேங்காய்
- புளி சிறிது
- 1 tsp கடுகு
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- மல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி மல்லி விதையை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- வறுத்த மல்லியை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதே கடாயில் உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வதங்கியதும் அதில் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து பாதி வதக்க வேண்டும்.பாதி வதங்கியதும் கருவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். புளியை சேர்க்க வேண்டும்.
- எல்லாம் நன்றாக வதங்கியதும் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.மிக்ஸி ஜாரில் மல்லிகை முதலில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதனுடன் வதங்கிய கலவையை சேர்த்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- வறுத்ததே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த கலவையை அதில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.கலவை என்னை பிரியும் வரை வதங்க வேண்டும்.இப்பொழுது சுவையான மல்லி சட்னி தயார்.