இவ்வளவு நாட்கள் வாடகை கொடுத்தது போதும்! சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் இதை செய்யுங்கள் போதும்!

- Advertisement -

பெரும்பாலும் அனைவரது கனவும் சொந்த வீடு கட்டுவதாகத் தான் இருக்கும். எப்படியாவது வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு முன்னேறி விட வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் சில தடைகளால் நம்மளால் அது முடியாமல் போகிறது அல்லது அதிக காலம் எடுக்கிறது. ஆனால் ஒரு தெய்வத்தை வழிபட்டால் ஜாதக ரீதியாக ஒருவருக்கு இருக்கும் தடை நீங்கி சொந்த வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும். அதற்கு நாம் ஒரு புதிய செங்கலை எடுத்து அவரை நினைத்து வழிபட்டாலே போதும். அது என்ன பரிகாரம் என்பதை பற்றியும், எப்படி வழிபட வேண்டும் என்பதனை பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

சொந்த வீடு கட்ட யோகம்

ஏழையாகவும், பணக்காரனாகவும் இருந்துவிடலாம் ஆனால் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கக் கூடாது என்று நம்மில் பலரும் புலம்புவதனை நாம் கேட்டிருப்போம். அது அவர்களின் கர்மவினையை பொருத்து அமைகிறது. சொந்த வீடு ஒருவருக்கு கடைசி வரை அமையாமலே போகலாம், அதுவும் அவரது வினைப்படி இறைவன் அமைத்தது. ஆனால் ஒரு சிலருக்கோ சிறு சிறு பரிகாரங்கள் செய்வதன் மூலமே சொந்த வீடு கட்டக்கூடிய யோகம் கை கூடி வருவதாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. அப்படியான ஒரு எளிய பரிகாரம் பற்றிய குறிப்புதான் இது! பொதுவாக செவ்வாய் பகவான் மற்றும் முருகப்பெருமான் ஆகியோரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீடு கட்டக்கூடிய பாக்கியம் பெறக்கூடும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

- Advertisement -

வரம் அளிக்கும் முருக பகவான்

சுகமான வாழ்க்கையை அளிக்கக் கூடியவர் சுக்கிர பகவான். வீடு கட்டும் பாக்கியத்தை அளிப்பவர் முருக பகவான் மற்றும் செவ்வாய் பகவான். செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் தோஷங்களில் இருந்து விடு பட்டு வீடு கட்டும் பாக்கியம் உருவாகும் என்று நம்பப்படுகிறது. இதற்காக பல முருகன் கோவில்களிலும் அவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன, அவற்றை எளிதாக நாமும் வீட்டிலேயே செய்யலாம்.

சொந்த மனை என்ன நிலம் கூட வாங்க வாங்க முடியாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரம் மனை வாங்கும் பாக்கியத்தை அந்த முருகப்பெருமான் அளிப்பார். அதற்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் முருகன் புகைப்படத்தை வீட்டில் வைத்து அவருக்கு விருப்பமான வாசனை மலர்களை சூட்டி, மஞ்சள், குங்குமம் இட வேண்டும். பின் அவருடைய வேலுக்கும் மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.

பின்பு இரண்டு வெள்ளியால் ஆன குத்துவிளக்கு இருந்தால் அதை வைத்து சுத்தமான நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் புதிதாக ஒரு செங்கலை நீங்கள் காசு கொடுத்து வாங்கி அதை நன்கு கழுவி சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு மலர் வைத்து அலங்கரித்து அதன் மீது இரண்டு அல்லது நான்கு வெற்றிலைகள் வைத்து அகல் விளக்கு ஒன்றை வைக்க வேண்டும்.

-விளம்பரம்-

48 வாரங்களில் நடக்கும்

விளக்குக்கும் மஞ்சள் குங்குமம் இட்டு நெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு விளக்கு ஏற்றிக் கொள்ளவும். முருகனுக்கு விருப்பமான நெய்வேதியம் எதையாவது வைத்து சுக்கிர பகவான், செவ்வாய் பகவான் மற்றும் முருக பகவானை மனதார வேண்டி, அவர்களுடைய மந்திரத்தை கூறி வந்தால் 48 வாரங்களுக்குள் மனை வாங்கும் பாக்கியம் வரும் என்பது நம்பிக்கை. இப்பதிகாரத்தின் மீது நம்பிக்கை இருப்பேன் அதனை நீங்களும் செய்து மனை வாங்கும் பாக்கியத்தை பெற்று நல்வாழ்வை வாழுங்கள்.