- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு விதமான உணவுகளை சமைக்க தான் செய்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வித சுவைகளில் குழம்பு, பொரியல் செய்யப்படுகிறது. அதிலும் ஆந்திராவில் செய்யப்படும் உணவு என்றால் அது மிகவும் காரணமாக இருக்கின்றது. அதேபோல் தமிழ்நாட்டில் செய்யப்படும் உணவு வகைகள் மிதமான காரத்துடன் இருக்கும். அவ்வாறு செட்டிநாடுகளில் செய்யும் உணவுகள் எப்பொழுதும் மசாலா வாசனை அதிகமாகவே இருக்கும். இவ்வாறு செய்யப்படும் குழம்பு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். எனவே தான் செட்டிநாடு சமையல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கிறது.
மதியம் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் மசாலா செய்யுங்கள். ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளன, பலரும் வேண்டாம் என்று ஒதுக்கக் கூடிய ஏழையின் காய்கறிகளில் ஒன்றான கத்திரிக்காய் பல்வேறு விதமான சத்துக்கள் நிறைந்த காய்கறி ஆகும். கத்திரிக்காய் போன்ற காய்களை ஒரு சிலர் எடுத்துக் கொள்ள தயங்குவார்கள். கத்திரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு, அலர்ஜி போன்றவை வரும் என்ற மூடநம்பிக்கையால் அதனை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் இந்த கத்திரிக்காய் சிறுநீரக கற்களைக் கரைக்கும் வல்லமை கொண்டது.
ஆஸ்துமா, கீழ்வாதம் பித்தம் சளி மலச்சிக்கல் உடல் பருமன் வாத நோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது இந்த கத்தரிக்காய். இந்த செட்டிநாடு கத்திரிக்காய் மசாலா ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். அதுவும் இது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். கத்திரிக்காய் வைத்து பொரியல், சாம்பார், குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் போன்ற ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான கத்திரிக்காய் வறுவல் செய்து பாருங்கள். இந்த கத்திரிக்காய் வறுவல் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அளவிற்கு சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : கொங்கு கத்திரிக்காய் கிரேவி இப்படி செய்தால் வெரைட்டி ரைஸ், ரொட்டி சப்பாத்தி எல்லாத்துக்குமே இது அட்டகாசமான காம்பினேஷன்!
Ingredients
Method
முதலில் கத்தரிக்காயை நன்கு கழுவி நீளமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, தேங்காய் துருவல், மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
ஒரே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி, நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
தண்ணீர் சுண்டியதும் சிறிதளவு கறிவேப்பிலை தூவி இறக்கினால் செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா தயார்.






