பொதுவாக மயில் இறகை பார்த்தவுடன் நமக்கு ஞாபகம் வருவது தமிழ் கடவுள் முருகரின் வாகனம் என்ற சிந்தனை தான். இதையும் தாண்டி நாம் மயில் இறகை பலர் தங்களது வீடுகளை அலங்கரிக்கிறது அலங்கரிப்பதற்கு பயன்படுத்தி கொள்வார்கள். சிலர் தங்களின் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வருவதற்காக பூஜை அறையில் வைத்தும் பூஜை செய்வார்கள். ஆனால் இதையும் தாண்டி மயில் இறகியிருக்கு பல சக்திகள் உண்டு. அந்த மயில் இறகை நம் வீட்டில் வைப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் இன்று தெளிவாக காணப் போகிறோம்.
நீங்கள் பணம் வைத்து இருக்கும் இடம் அல்லது பீரோவில் நகைகள் வைத்திருக்கும் இடத்தில் நல்ல வாசனை தரும் பொருட்களை வைத்து அதனுடன் ஒரு மயில் இறகையும் வைத்தால் உங்கள் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் வறமை இருக்காது.
மயில் இறகை வீட்டிற்குள் வைப்பதும் சரி, வீட்டிற்கு வெளியே வைப்பதும் சரி, மயில் இறகிற்கு எதிர்மறை ஆற்றலை தடுத்து நிறுத்தும் சக்தி உண்டு. அதனால் வேலை பார்க்கும் நிறுவனங்களில் நீங்கள் அமர்ந்திருக்கும் இடங்களில் மயில் இறகை வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றலை தடுக்கலாம். மேலும் படுக்கை அறையில் மயில் இறகை வைப்பதன் மூலம் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையிலும் நல்லதே நடக்கும்
சனி தோஷம் இருந்தால் நீங்குவதற்காக மூன்று மயில் இறகை ஒன்று சேர வைத்துக் கொண்டு அதை கருப்பு கயிறு கொண்டு கட்டி கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் பாக்கைய போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் மயில் இறகை அந்த தண்ணீரில் நணைத்து வீடு முழுக்க தெளித்துக் கொண்டு 21 முறை “ஓம் சனீஸ்வராய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்தால் சனி தோஷம் நீங்கும்.
உங்களது வீட்டில் வாஸ்து சம்பந்தமான தோஷங்கள் ஏதேனும் இருந்தால் அந்த தோஷத்தை நீக்க இந்த மயில் இறகு உதவியாக இருக்கும். ஆம் ஒரு எட்டு மயில் இறகை ஒன்று சேர வைத்து ஒரு வெள்ளை நிற நூலினால் கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து “ஓம் சோமய நமஹ” என்ற என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தால் உங்கள் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கி விடும்