இந்த உலகில் ஒரு உயிர் பிறந்து அதே உயிர் இறந்து போகும் வரை அதற்கு தேவையானது என்று ஒன்று இருந்தால் அது பணம் மட்டுமாகவே இருக்கும். ஏன் நீங்களே சிந்தித்து பாருங்கள் ஒரு உயிர் பிறப்பதற்கு மருத்துவமனைகளில் கூட சில சமயம் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. அந்த உயிர் இறக்கு தருவாயில் இருக்கும் போது. அதே உயிர் இறந்த பின்னும் அதற்காக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி மனிதனின் வாழ்வின் ஒரு அங்கமாகவே தற்போது பணம் என்பது மாறிவிட்டது
மந்திரம்
நம்மிடம் பணமாக இருந்தாலும், நம்மிடம் இருக்கும் சொத்துக்கள், செல்வங்கள் என அனைத்திற்கும் சொந்தக்காரி மகாலட்சுமி தேவி தான். அதனால் பணம், சொத்துக்கள், செல்வங்கள் வந்து நம்மிடம் தங்குவதற்கு லட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் அதற்கு நாம் உழைப்பது மட்டுமே ஒரே வழி. ஆனால் சிலர் என்னதான் ஆயுள் முழுவதும் கடினமாக உழைத்தாலும் அவர்களிடம் பணம் சேர்வதில்லை. இது போன்ற கையில் சேரும் பணமெல்லாம் வீன் செலவாகி போகிவிடும். இதற்கு வெள்ளிக்கிழமை தினத்தன்று இந்த பூமியில் இருக்கும் ஒட்டுமொத்த செல்வங்களையும் அதிபதியான குபேரரை மனமாற வேண்டி இந்த மந்திரங்களை சொல்வதன் மூலம் நமக்கு இருக்கும் பணக்கஷ்டங்கள் தீர்ந்துவிடும் அது என்னென்ன மந்திரங்கள் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
குபேர மந்திரம்
“ஓம் யஷ்யாய ராஜாய வித்மஹே, அலகாதீசாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்”
குபேர ஸ்தோத்திரம்
“சங்க பத்மாதி நிதயே குபேராய நமோ நம:
தனதான்ய ஸ்ம்ருத்திஸ்து த்வத் ப்ரஸாதாத் மயிஸ்த்திர”
“நவநிதி ஸமோபேதம் தன தம்யாண புஷ்பகம்.
பிங்காக்ஷம் பாவயே நித்யம் ஹைம வர்ண மநோஹரம்”
“ஸ்ரீ தனாகர்ஷண ஸ்ரீ மஹாலட்சுமி ஸஹிதம்
ஸ்ரீ குபேர ராஜம் தாயாயாமி”
“ஸ்ரீ தனாகர்ஷண ஸ்ரீ மஹாலட்சுமி ஸஹிதம் ஸ்ரீ குபேராய நம”