நல்ல வேலை, அரசாங்க வேலை கிடைக்க வெளியே செல்லும் போது இதை செய்யுங்கள்! வேலை கிடைக்கும்!

- Advertisement -

இன்றைய நாட்களில் சமுதாயத்தில் நீங்கள் மதிக்கப்படுவதும் மதிக்கப்படாமல் போவதும் நீங்கள் செய்யும் வேலையை பொறுத்தே அமையும். ஆனால் இங்கு பலருக்கு வேலை கிடைப்பதிலேயே பல பிரச்சினைகள் இருக்கின்றது. சிலர் படித்து முடித்துவிட்டு தனது பிடித்த வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வேலையும் கிடைக்கும் வரை அவர்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு தான் தெரியும். ஆனால் எதற்கோ படித்துவிட்டு வீட்டின் சூழ்நிலை காரணமாக எந்த வேலைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று நினைப்பவர்களுக்கும் வேலை கிடைப்பது கடினமாக தான் உள்ளது. அதனால் வேலை கிடைப்பதற்கு ஆன்மீக ரீதியாக நாம் என்ன செய்யலாம் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

இந்த நேரத்தில் செய்யுங்கள்

சாஸ்திரங்கள் கூறுவது படி வேலை தேடுபவர்கள் எல்லாம் உங்கள் வேலைக்காக நீங்கள் சில முயற்சி எடுப்பீர்கள். அப்படி என்ன முயற்சி செய்தாலும் அந்த முயற்சியை சுக்கிர ஓரையிலும், குரு ஒரையிலும் செய்து வரும் போது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்குமாம். அதாவது இப்போது நீங்கள் உங்கள் வேலைக்காக சில படிவங்களை நிரப்புதல் அல்லது வேறு வேலை விஷயமாக வெளியே செல்லும் நேரங்களில் இதை தவறாமல் கடைபிடித்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

செவ்வாய் முருகனுக்கு தீபம்

மேலும் ஒரு சிலர் தனக்கு பிடித்த மாதிரியான நல்ல வேலைகளுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். இது போன்ற நபர்கள் வாரம் தவறாமல் செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி மனம் உருகி முருகனை வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்குமாம். இப்படி வாரந்தோறும் செவ்வாய் கோவில்களுக்கு செல்ல முடியாத நபர்கள் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் கோவிலுக்கு செல்லலாம். குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் முருகன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வணங்குவது சிறப்பானதாக இருக்கும், உங்களுக்கு கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும்.

இனிப்பு

அதேபோல் நீங்கள் வேலை விஷயமாக எங்கு வெளியே சென்றாலும் தவறாமல் கையில் ஏதாவது இனிப்பு பொருள் ஒன்று வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சுக்கிரனின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம், இனிப்பு பொருள் சுக்கிர பகவானுக்கு மிகவும் உகந்த பொருள். அதனால் வேலை விஷயமாக வெளியே செய்யும் போது கையில் ஏதேனும் இனிப்பு பொருள் வைத்துக் கொள்ளுங்கள் எதுவும் முடியாத பட்சத்தில் கையில் ஒரு சாக்லேட் ஆவது வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் நீங்கள் வேலை தேடி செல்லும்போது குரு ஸ்தானத்தில் இருக்கும் மகாலட்சுமி கோவில், அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு போனால் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சக்தி வாய்ந்த பரிகாரம்

நாம் மேலே பார்த்த விஷயங்களை விட உங்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்காகவும், அரசாங்க வேலைக்காவும், பார்க்கும் வேலையில் ஒரு முன்னேற்றம் இருப்பதற்காகவும். ஏன் நீங்கள் தொழில் நடத்துபவராக இருந்தால் கூட தொழில் சம்பந்தமான காரியங்களில் வெற்றி பெறுவதற்கும் தொழிலில் லாபம் எடுக்க நினைப்பவர்களும் கூட இதை செய்யலாம். உங்கள் வீட்டில் இருக்கும் நாட்டு சர்க்கரை வெல்லம் இரண்டையும் பொடியாக்கி கலந்து உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் எறும்புகளுக்கு வைத்து வரலாம். இப்படி செய்யும்போது உங்களின் வேலை மற்றும் தொழிலுக்கு தடையாக இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும். இது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை உங்களுக்கு கொடுக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here