- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாகளில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது கோபி பக்கோடா. மாலை நேரத்தில் டீ காபி குடிக்கும் போது ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அதுவும் வீட்டிலேயே சிம்பிளா ஏதாவது செய்து சாப்பிட வேண்டுமென்றால் இந்த கோபி பக்கோடா செய்து சாப்பிடுங்கள்.
குறிப்பாக குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பக்கோடா செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, சுலபமாக செய்து விடலாம். வெறும் வெங்காயம், கடலை மாவு, மற்றும் அரிசி மாவு இருந்தால் போதும் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். மாலை நேரங்களில் என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தால் யோசிக்காமல் இந்த எளிதாக செய்யக்கூடிய காலிஃப்ளவர் பக்கோடாவை செய்து உங்கள் காபியுடன் சுவையுங்கள். இப்போது சுவையான கோபி பக்கோடா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : இரவு உணவுக்கு ஏற்ற ருசியான காலிஃப்ளவர் பராத்தா இப்படி செய்து பாருங்க இதன் ருசியே தனி ருசி!!
Ingredients
Method
முதலில் காலிஃப்ளவரை சிறிது நேரம் சுடு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், ஓமம், கடலை மாவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கோபி பக்கோடா தயார்.






