Home ஆன்மிகம் தங்கம் இல்லாத வீட்டில் கூட தங்கம் சேர! இந்த ஒரே ஒரு இலை கையில் இருந்தால்...

தங்கம் இல்லாத வீட்டில் கூட தங்கம் சேர! இந்த ஒரே ஒரு இலை கையில் இருந்தால் போதும்!

நாம் அணிகலன்களாக அணிவதற்கு எத்தனையோ ஐஸ்வர்யங்கள் இருந்தாலும் ஆண்கள், பெண்கள் என எவராக இருந்தாலும் தங்க நகைகளை வாங்குவதற்கு தான் ஆசைப்படுவார்கள். நம் கையில் தங்கம் இருக்கும் பட்சத்தில் அது ஒரு முதலீடாக இருக்கும். அதை நாம் எப்போதும் வேண்டுமானாலூம் பணமாக மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு இந்த தங்கம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்படி உங்கள் வீட்டில் ஒரு கிராம் அளவு தஙகம் இருந்தாலும் அதை வைத்து பவுன் கணகில் தங்கம் வாங்குவதற்கு ஒரு எளிய பரிகாரம் செய்தாலே போதும். அதை பற்றி தான் நம் ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் பாருங்கள்.

-விளம்பரம்-

தங்கம்

நம் முன்னோர்கள் வீட்டில் ஒரு குண்டு மணி அளவிலாவது தங்கம் இருக்க வேண்டும் என சொல்லுவார்கள். ஏன்னென்றால் வீட்டில் தங்கம் இருப்பது மகா லட்சுமியை வீட்டில் இருப்பதற்கு சமம். அப்படி நம் வீட்டில் இருக்கும் தங்கத்தை மென்மேலும் பெருக்குவதற்கு உங்களிடம் ஒரு கிராம் தங்கம் இருந்தால் கூட அதுவே போதுமானதாக இருக்கும். அதனுடன் ஒரு இலை இருந்தால் போதும். இது உங்கள் வீட்டில் இருக்கும் தங்கத்தை மென்மேலும் பெருக செய்யும் அது என்ன இலை என்று உங்களுக்கு தெரியுமா ?

பூவரசம் இலை

நம் பகுதிகளில் சாதாரணமாக தேடிப் பார்த்தாலே இந்த பூவரச இலை எல்லா இடங்களிலும் கிடைக்கும். நம் முன்னோர்கள் இந்த பூவரச மரத்தின் இலையை பெரும்பாலான நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தி வந்தார்கள். காரண காரியங்கள் இல்லாமல் நம் முன்னோர்கள் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அது போல தான் இந்த பூவரச இலையை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தியதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. ஆம், இந்த பூவரசன் இலையில் நேர்மறை ஆற்றலின் சக்தி அதிகம் இருப்பதால் இந்த மரம் உள்ள இடங்களை சுற்றி நல்லதே நடக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.

பரிகாரம்

சரி, வாருங்கள் இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம். பூவரச மரத்திலிருந்து ஒரு பூவரச இலையை எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதை தண்ணீர் வைத்து அதன் மேல் இருக்கும் அழுக்குகளை துடைத்து நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின்பு உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய கம்மல், மூக்குத்தி என எந்த தங்கமாக இருந்தாலும் சரி தங்கத்தை நாம் வைத்திருக்கும் ஒரு பூவரச இலையில் வைத்து நன்குமடித்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த இலையை நூல் கொண்டு அல்லது வாழை நார் கொண்டு நன்கு கட்டிக் கொள்ளுங்கள்.

பீரோவில் வையுங்கள்

பின்பு இப்படி நாம் கட்டிக் கொண்ட பூவரச இலையை நம் பூஜை அறையில் உள்ள குலதெய்வத்தின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் வைத்து எங்களது வீட்டில் தங்க நகை சேர வேண்டும் தங்கமாக கூடிய யோகம் கூடி வர வேண்டுமே உங்களின் குலதெய்வம், மகாலட்சுமி தாயார் அல்லது உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பின்பு தங்கத்தை சுருட்டி வைத்த இந்த இலையை உங்கள் வீட்டு பீரோவில் நீங்கள் பணம் வைத்து எடுக்கும் இடத்தில் அல்லது நீங்கள் பணம் வைத்திருக்கும் தனிப்பட்ட பெட்டியில் வைத்து விடுங்கள்.

-விளம்பரம்-

இலை வாடிய பிறகு

அதன் பிறகு நாம் வைத்திருக்கும் இலை வாடும் வரை காத்திருங்கள். அந்த இலை வாடிய பிறகு மீண்டும் ஒரு பூவரச இலையில் வைத்து மீன்டும் அதை போல் நூல் அல்லது வாழை நாரால் சுற்றி உங்கள் குல தெய்வத்தை மனதில் நினைத்து வேண்டி பூஜை அறையில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் அதே இடத்தில் வைத்து ஒவ்வொரு முறையும் இலையை மாற்றி தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தால் விரைவிலேயே உங்கள் வீட்டிற்கு தங்கம் வாங்க கூடிய யோகம் வந்துவிடும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கை, கால், கழுத்து அனைத்தும் உன் தங்க நகைகள் சேருவதை நீங்களே கண்கூடாக பார்பீர்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here