இந்த 3 பொருளும் ஒன்றாக உங்கள் வீட்டில் இருந்தால் போதும்! தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும், அடகு வைத்த நகையை கூட மீட்கலாம்!

- Advertisement -

பொதுவாக தங்கத்தை அனைவராலும் வாங்கிட முடியாது நீங்கள் நன்றாக பார்த்தால் உங்களுக்கே தெரியும் ஒருவன் எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும் அவனிடம் தங்கம் வாங்க கூடிய யோகமும் இருந்தால் மட்டுமே அவனால் தங்கம் வாங்க முடியும். அதையும் மீறி அவன் தங்கம் வாங்கினான் என்றால் அப்படி அவர்கள் வாங்கிய தங்கம் அவர்கள் கையில் என்றும் நிலையாக இருக்காது ஏதாவது ஒரு வகையில் அந்த தங்கம் அவர்களை விட்டு சென்றுவிடும். அப்படி நாம் தங்கம் வாங்க வேண்டும், வாங்கிய தங்கம் நிலையாக நம்மிடம் இருக்க வேண்டும் என்றால் மகாலட்சுமி தேவியின் பரிபூரண அருளும் நமக்கு இருக்க வேண்டும் ஏனென்றால் ஸ்வர்ணத்தின் அதிபதியே மகாலட்சுமி தேவி தான்.

-விளம்பரம்-

இன்னும் சிலருக்கு தங்கம் வாங்கக்கூடிய யோகம் இருக்கும் ஆனால் அவர்களிடம் பணம் இருக்காது அதையும் மீறி அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து சிறிது சிறிதாக தங்கத்தை சேர்த்தாலும். அவர்கள் வாழ்வில் ஒரு படி முன்னேறுவதற்காக அப்படி வாங்கி தங்கத்தை முதலீடாக வைப்பார்கள் அதாவது வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி தொழில் தொடங்க வியாபாரம் தொடங்க இது போன்ற விஷயங்களுக்காக நாம் வைத்திருக்கும் தங்கங்களை அடமானம் வைப்போம் அல்லவா அது தான். ஆனால் அந்த தங்க நகையை மீட்காமல் முடியாமல் போகும் நிலை கூட ஏற்படும் இப்படி பட்டவர்களும் கூட தங்கத்தை மீட்டு மேலும் தங்கம் சேர என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

- Advertisement -

தேவையானவை

இப்படி தங்கம் வாங்கக்கூடிய யோகம் இல்லாதவர்களுக்கும் வைத்திருந்த தங்கத்தை அடமானத்தில் வைத்துக் கொண்டு திரும்ப மீட்க முடியாமல் தவிப்பவர்களும் தாந்த்ரீக ரீதியாக இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் மட்டும் போதும் அது என்ன பரிகாரம் என்றால் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகம் வெளியிடக்கூடிய மூன்று பொருள்களை ஒன்றாக வைப்பதன் மூலம் உங்களுக்கு தங்கம் வாங்க கூடிய யோகமும் கிடைக்கும் அடமானத்தில் தங்கம் வைத்து இருந்தாலும் அதை மீட்க முடியும் ஏன் இன்னும் கூட உங்கள் வீட்டில் தங்கம் சேரும். அப்படி தங்கம் சேர அதிகமான நல்ல சக்திகளை உள்ளடக்கி கொண்ட பச்சை கற்பூரம் கிராம்பு மற்றும் துளசி இந்த மூன்று பொருட்களும் பரிகாரத்திற்கு தேவைப்படும்.

தங்கம் வாங்க கூடிய யோகம்

இதில் நாம் எடுத்துக் கொண்ட பச்சைக் கற்பூரமும், கிராம்புவும் அதிக அளவு நல்ல சக்திகளை கொண்ட பொருளாகவும் இருக்கும். அதே நேரம் பெருமாள் கோவில் வழங்கப்படும் தீர்த்தங்களில் கலந்தும் கொடுப்பார்கள் அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்தது. நாம் எடுத்துக் கொண்ட துளசி இலை பெருமாளின் ரூபமாகவும், மகாலட்சுமியின் ரூபமாகவும் விளங்கக்கூடிய பொருள் ஆகையால் இந்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஒரு சிறிய கண்ணாடியால் செய்யப்பட்ட கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொண்டு. அந்த கிண்ணத்தில் பச்சை கற்பூரம், துளசி மற்றும் கிராம்பு இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து போட்டு இதனுடன் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சிறிய தங்கத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள் அதாவது கம்மல் திருகாணி, சிறிய மூக்குத்தி இப்படி தங்கத்தில்லான ஒரு பொருளை இந்த மூன்று பொருட்களுடன் சேர்ந்து இருக்கும்போது உங்கள் வீட்டில் தங்கம் வாங்க கூடிய யோகம் இருந்து கொண்டே இருக்கும்.

தங்கமே இல்லை என்றாலும்

உங்கள் வீட்டில் பரிகாரம் செய்ய கூட குண்டுமணி அளவு தங்கம் இல்லை என்று சொல்பவராக இருந்தாலும் கூட நீங்கள் மேலே சொன்ன தாந்த்ரீக பரிகாரத்தை செய்து உங்கள் வீட்டில் உள்ள பீரோவில் வைத்துவிட்டு உங்கள் குல தெய்வத்தை, அல்லது மகாலட்சுமி தாயாரையோ மனதார நினைத்து உங்களுக்கு தங்கம் வாங்க கூடிய யோகம் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் மகாலட்சுமி தாயாரிடம் இந்த பிரார்த்தனையை வைப்பதாக இருந்தால் பௌர்ணமி நாளில் வரும் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்வது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

-விளம்பரம்-

பரிகாரம் இன்னும் சிறப்பாக வேலை செய்ய

மேலும் இந்த பரிகாரத்தை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்றால் அங்கு பிரசாதமாக துளசி இலை தருவார்கள். அந்த துளசி இலைய எடுத்து வந்து நீங்கள் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்துவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இப்படி நீங்கள் பரிகாரத்திற்கு பயன்படுத்தப் பொருட்களில் துளசி இலை காய்ந்து விடும் அந்த சூழ்நிலையில் பழைய துளசி இலைகளை மனிதனின் காலடிப்படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதியதாக துளசி இலையை சேர்த்து வைக்கலாம்.

பெருமாள் கோவில் தீர்த்தம்

மேலும் நீங்கள் பெருமாள் கோயில் செல்லும் போது அங்கு கொடுக்கும் தீர்த்தத்தை கொண்டு வந்து உங்கள் வீட்டின் பீரோவில் சில இடங்களை தெளித்து விடும்போது உங்களுக்கு தங்கம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். மேலும் நீங்கள் அடமானத்தில் வைத்திருந்த தங்க நகையை கூட மீட்டு எடுக்கும் யோகமும் சேர்ந்து கிடைக்கும். பொதுவாக நாம் எந்த ஒரு காரியத்தையும் சந்தோசமாகவும், ஆத்மார்த்தமாகவும் செய்தால் அதனுடைய முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்பார்கள் அதனால் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here