நீங்கள் ஆசைப்பட்டு வாங்கி அடகு வைத்த தங்க நகையை மீட்க வேண்டுமா! ஒரு பேப்பரில் இதை மட்டும் எழுதுங்கள் போதும்!

- Advertisement -

நாம் கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தை ஏதாவது திடீர் என்று வரும் பெரிய செலவுகளுக்காக செலவு செய்யும் போது கூட பணம் தானே திரும்ப சேர்த்துக் கொள்ளலாம் என்ற மன தைரியம் நமக்கு வந்துவிடும் அல்லது அந்த மன பக்குவம் இருக்கும். ஆனால் நாம் ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் தங்க நகைகளை திடீரென்று வரும் பெரிய செலவுகளை சமாளிப்பதற்கக சில சமயங்களில் அடகு வைப்போம். இப்படி தங்க நகைகளை அடகு வைப்பதே நமக்கு சிறு தயக்கத்தையும் கலக்கத்தையும் கொடுக்கும் என்பது உங்களுககு நன்றாகவே தெரியும்.

-விளம்பரம்-

அடகு நகையை வேகமாக மீட்க

மேலும் நாம் தங்க நகையை மட்டும் அடமானம் வைக்காமல் சில சமயங்களில் நாம் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்து அது பத்தாமல் மறுபடியும் நகையை அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம் வாழ்க்கையில் சிறிது நாள் சோர்ந்தே போய்விடுவோம். ஆனால் நாம் அப்படி ஆசைப்பட்டு வாங்கிய தங்க நகை அடகு வைத்து மீட்டு விட்டால் ஒன்றும் தெரியாது. ஆனால் தப்பி தவறி நகையே மீட்க முடியாமல் போய்விட்டால் நாம் மனநிலை எப்படி இருக்கும் என்று நம்மாலயே சொல்லவே முடியாது. அதனால் நீங்கள் அடகு வைத்த நகையை வேகமாக மீட்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

- Advertisement -

கல் உப்பின் மகத்துவம்

இப்படி நாம் ஆசைப்பட்டு வாங்கி அடகுக்கு சென்ற தங்க நகை மீட்பதற்கு நாம் செய்யும் இந்த தாந்த்ரீக வேலையை ஒரு பரிகாரமாக கூட நீங்கள் எடுத்து கொள்ளலாம். இந்த தங்க நகையை மீட்பதற்காக நாம் செய்யும் பரிகாரத்திற்கு தேவைப்படும் முக்கியமான பொருள் ஒன்றே ஒன்று தான் அது கல்லு உப்பு. ஆம் கல் உப்பின் மகத்துவம் பற்றி தெரியுமா உங்களுக்கு? கல் உப்பு என்பது மகாலட்சுமி தேவியின் அம்சமாக விளங்கக்கூடிய ஒரு பொருள். இந்த கல் உப்பு அதை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள் மற்றும் எதிர்மறையான எண்ணங்களை தனக்குள் ஈர்த்து கொள்ளும் மகத்துவம் நிறைந்த ஒரு பொருள்.

பரிகாரம்

.இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு ஒரு சில்வர் தட்டு ஒன்று தேவைப்படும் அந்த சில்வர் தட்டை எடுத்துக் கொண்டு அதில் நாம் வைத்திருக்கும் கல் உப்பை கொட்டி பரப்பி விடுங்கள். பின்பு நான் பரப்பி விட்ட உப்பின் மீது நீங்கள் அடகு வைத்து தங்க நகைகளின் முழு விவரங்களை ஒரு பேப்பரில் எழுதி கடைசியாக அந்த பேப்பரில் இந்த தங்க நகைகளை நான் திருப்பி விட்டேன் என்று ஒரு வார்த்தையையும் எழுதி வைத்து விடுங்கள். நீங்கள் உப்பின் மீது வைத்திருக்கும் பேப்பரின் மீது ஒரு எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும். அதன் மேல் சிறிது மிளகையும் பேப்பரின் மீது தூவி விடுங்கள் அவ்வளவு தான்.

காந்தம் போல் பணத்தை ஈர்க்கும்

அதன் பிறகு நீங்கள் தயார் செய்த இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் பூஜை அறையில் கொண்டு சென்று தட்டுடன் வைத்து விடுங்கள். அதன் பின்பு நீங்கள் தினசரி வீட்டில் பூஜை செய்யும் பொழுதெல்லாம் கற்பூர தீபாராதனை காட்டும் பொழுது நாம் பரிகாரம் செய்து வைத்திருக்கும் இந்த தட்டிருக்கும் சேர்த்து காட்டி விடுங்கள். மேலும் நாம் பரிகாரம் செய்த பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியங்களும் இருக்காது. நீங்கள் சாதாரணமாக ஒரு உப்பை ஒரு கிண்ணத்தில் அல்லது தட்டில் கொட்டி அதை உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் வைத்தால் கூட பணத்தை காந்தம் போல உங்களுக்கு ஈர்த்து கொடுக்கும். அத்துடன் எலுமிச்சை பழம் சிறிதளவு மிளகு நகைகளின் விவரம் எழுதி வைத்திருக்கும் பேப்பர் இவையெல்லாம் சேர்ந்து உங்களுக்கு நீங்கள் அடகு வைத்து நகையை மீட்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

-விளம்பரம்-

நகையை மீட்க முயற்சி எடுங்கள்

இப்படி இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து முடித்தவுடன் தங்க நகை நேரடியாக உங்கள் கையில் வந்து சேர்ந்து விடாது. இந்த பரிகாரத்தை முடித்த கையுடன் உங்கள் தங்க நகைகளை மீட்பதற்கு என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அத்தனை முயற்சிகளும் நீங்கள் செய்ய வேண்டும். உதாரணமாக பணம் திரட்ட வேண்டி இருந்தால் பணம் திரட்டுங்கள் இந்த முயற்சிகளை நீங்கள் செய்யும் போது உங்களுக்கு இடையூறாக வரும் அனைத்து தடைகளையும் இந்த பரிகாரம் தடுத்து விடும். எந்த ஒரு செயலையும் நம் முழு நம்பிக்கையுடன் செய்யும் போது அதனுடைய முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்பார்கள். அதனால் நம்பிக்கையுடன் இதையும் செய்து பாருங்கள் நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும்.