அடுத்தவர்கள் மதிக்கும் அளவிற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருளை பர்சில் வையுங்கள்!

- Advertisement -

இன்றைய நாட்களில் ஒரு மனிதனின் மதிப்பை தீர்மானிப்பது அவன் செய்யும் வேலையும் அவனிடம் இருக்கும் பணமாக மட்டும் தான் இருக்க முடியும். அது மட்டுமா ஒருவன் என்னதான் படிப்புகள் படித்திருந்தாலும் அவனிடம் நல்ல வேலையும், பணமும் இல்லை என்றால் உறவினர்கள் கூட மதிக்க மாட்டார்கள். அதே மாதிரி ஒருவன் படிக்காதவனாக இருந்தாலும் அவனிடம் பணம் இருந்தால் போதும் அவனுக்கு உண்டான மரியாதையை கொடுத்து அனைவரும் தாங்கு தாங்கு என்று தாங்குவார்கள் ஆனால் இங்கு யாரும் வேலை கிடைத்து வேலைக்கு போக வேண்டாம் என்று இல்லை.

-விளம்பரம்-

பிடித்த வேலை, படித்த படிபிக்கான வேலை

ஒவ்வொருவரும் படித்த படி ஒன்றாக இருக்கும் ஆனால் அவர்கள் பார்க்கும் வேலை ஒன்றாக இருக்கும். அதில் வருமானமும் குறைவாகத்தான் இருக்கும். அவன் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும் இந்த உலகம் அவனை தூற்ற தான் செய்யும் அதை போல் சிலர் படித்த படிப்பிற்கான வேலையும் அவர்களுக்கு பிடித்த ஒரு வேலையும், என் அரசாங்க வேலையை கிடைப்பதற்காக கூட சிலர் வைராக்கியமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் வேலை கிடைப்பதற்குள் அவர்கள் படும் துன்பங்கள் கஷ்டங்கள் ஏராளம் அது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கின்ற வேலை கிடைக்க ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

- Advertisement -

விநாயகர்

பொதுவாக எந்த ஒரு விஷயத்தை நாம் தொடங்கினாலும் விநாயகர் பெருமானை வேண்டிக் கொண்டு தொடங்கினாள் அந்த காரியம் வெற்றியில் தான் முடியும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அதனால் நீங்கள் எதிர்பார்த்த வேலையும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் வாராவாரம் திங்கள் கிழமை அன்று உங்கள் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவில் சென்று இரண்டு மண் விளக்கு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, திரிபோட்டு விளக்கு ஏற்றி வாருங்கள். மேலும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் உங்கள் வேலை விஷயமான தடைகள் அனைத்தும் நீக்கி நீங்கள் எதிர்பார்த்த வேலை உங்களுக்கு கிடைக்கும்.

சிவப்பு நிற துணி

அதேபோல நீங்கள் நினைத்த வேலை கிடைப்பதற்காக பல இடங்களில் வேலை கேட்டு செல்ல வேண்டி இருக்கும், பல நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் வெளியே செல்லும்போது உங்கள் வீட்டில் இருக்கும் சிவப்பு நிற துணியிலிருந்து சிறிது அளவு துணியை வெட்டி அதை உங்கள் மணி பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி இந்த சிவப்பு நிற துணியோடு நீங்கள் வேலைக்காக செல்லும் இடங்கள் எல்லாம் வெற்றியோடு முடியும். ஏனென்றால் சிவப்பு நிறம் என்பது அம்மனுக்கு உகந்த நிறம் அதனால் கண்டிப்பாக இதை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

குரு பகவான்

அதேபோல் மஞ்சள் நிறம் குரு பகவானுக்கு உகந்த நிறமாகும் அதனால் உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போதெல்லாம் உங்கள் வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டைக்கு சென்று அங்கு இருக்கும் பசு மாடுகளுக்கு மஞ்சள் நிற வாழைப்பழத்தை சாப்பிட கொடுங்கள். இப்படி செய்யும் பொழுது குருவின் பார்வை உங்களுக்கு கிடைக்கும் குருவின் பார்வை கிடைத்தால் கோடி பலன் என்பார்கள். மேலும் பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பதால் கோமாதா லட்சுமி கடாட்சமும் உங்களுக்கு கிடைக்கும் இதனால் உங்கள் நீங்கள் நினைத்த வேலை கிடைத்து அதிலும் கை நிறைய சம்பளம் வாங்குவீர்கள்.

-விளம்பரம்-

கையெழுத்து

தமிழில் பேச்சு வழக்கில் ஒருவரின் கையெழுத்தை வைத்த அவரது தலையெழுத்தை சொல்லிவிடலாம் என்று சொல்வார்கள். அதேபோலத்தான் நீங்கள் கையெழுத்து போடும்போது கடைசியில் புள்ளி வைத்து முடிப்பவராக இருந்தால் இனி நீங்கள் கையெழுத்து போடும் ஸ்டைலை மாற்றிக் கொள்ளுங்கள். கையெழுத்து போடும் பொழுது அதை எப்போதும் புள்ளி வைத்து முடிக்க கூடாது அதை நீங்களே உங்கள் வெற்றி பாதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சமம் அதனால் வேலைக்கு சம்பந்தமாக நீங்கள் போடும் கையெழுத்தில் முடிந்த அளவிற்கு புள்ளி வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இந்த மேலே சொன்ன இந்த மூன்று விஷயங்களையும் நீங்கள் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here