- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
நம்முடைய சமையலறையில் தினமும் வைக்கக்கூடியது ரசம். குழம்பை கூட சில பேர் சுவையாக வைத்து விடுவார்கள். தென்னிந்தியாவில் எந்த விருந்து ரசம் இல்லாமல் நிறைவடைவது இல்லை. மிகவும் எளிமையான உணவு வகையாகவும் ரசம் கருதப்படுகிறது. ரசம் செய்வது மிகவும் எளிமையானது. மிளகு ரசம், புளி ரசம், இஞ்சி ரசம், தக்காளி ரசம் என ரசத்தில் பல வகையில் உள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது நெல்லிக்காய் ரசம்.
நெல்லிக்காய் புளிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையில் இருப்பதால் குழந்தைகள் அதை பெரிதாக விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். அதிலுள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஒட்டுமொத்த உடலையும் இன்ஃபிளமேஷன்கள், நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கக் கூடியது. அதனால் ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். அதற்கு இந்த ரசம் உதவியாக இருக்கும்.
இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வர எல்லோருக்குமே பிடிக்கும். இந்த ரசம் ரொம்ப ரொம்ப அட்டகாசமான சுவையில் இருக்கும் சுட சுட சாதத்தில் இந்த ரசத்தை ஊத்தி பிசைந்து சாப்பிடும் போது அவ்வளோ டேஸ்ட்டாக இருக்கும். இதில் நாம் வேகவைத்த பருப்பு எல்லாம் சேர்த்து செய்வதால் ஒரு வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். பொதுவாக நிறைய பேருக்கு குழம்பு சாதம் சாப்பிடுவதை விட ரசம் சாதம் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும்.
சின்ன குழந்தைகளுக்கு ரசம் சாதம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ரச பிரியர்களுக்கு இந்த மாதிரி கொஞ்சம் சூப்பரான நெல்லிக்காய் ரசம் செய்து கொடுத்து பாருங்கள். கண்டிப்பா இந்த ரசம் ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கு விருந்து வைக்கும் போது இந்த ரசம் ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் இட்லி, தோசைக்கு பக்காவான நெல்லிக்காய் துவையல் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
பின் அதில் காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயத்தூள், இடிந்த பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் புளி தண்ணீர் மற்றும் வேகவைத்த பருப்பு சேர்த்து கலந்து விடவும்.
அதன்பிறகு தேவையான அளவு மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான நெல்லிக்காய் ரசம் தயார்.






