வாழ்க்கை முழுவதும் வற்றாத பண வரவு வேண்டுமா ? இவரின் அனுகிரகம் மட்டும் கிடைத்தாலே போதும்!

- Advertisement -

இந்த உலகில் ஒரு மனிதன் பிறக்கும் தருவாயில் இருந்து அதே மனிதன் இறக்கும் தருவாய் வரை இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் வாழும் வாழ்க்கையை ஒரு அழகான நிம்மதியான வாழ்க்கையாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு நிச்சயம் பணம் என்பது அத்தியாவசியமாக தேவைப்படும் ஒன்றாகிவிட்டது. இன்றைய நாட்களில் ஒரு சிறு குழந்தையிடம் கேட்டால் கூட பணத்தின் முக்கியத்துவத்தை பற்றி அருமையாக கூறுவார்கள். அந்த அளவிற்கு இவ்வுலகில் பணம் என்பது அனைவராலும் விரும்ப கூடிய ஒன்றாக மாறிவிட்டது. இந்த உலகில் பணம் இல்லாமல் நம்மால் ஒன்றுமே செய்ய இயலாது அப்படிப்பட்ட பணம் நம் வாழ்க்கை முழுவதும் நம்மிடம் வற்றாமல் சேர்ந்து கொண்டே இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

குருவின் பார்வை

பொதுவாக குருவின் பார்வை யார் மீது இருக்கிறதோ அவர்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் பணத்திற்கு பஞ்சமே வராது. மேலும் கல்வியாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும், குடும்ப வாழ்க்கை என அனைத்திலும் அவர்கள் சிறப்பானவர்களாக இருப்பார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் குரு பார்க்கின் கோடி நன்மை என்ற இந்த பொன்மொழியவே நமக்கு கூறி இருக்கிறார்கள். நம் வாழ்க்கையேவே மாற்றக்கூடிய குருவின் அனுகிரகத்தையும், அருளையும் நாமும் எப்படி பெறுவது என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

- Advertisement -

தட்சிணாமூர்த்தி

குரு பகவானின் அனுகிரகமும் அருளும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் தட்சிணாமூர்த்தியை நாம் முதலில் வணங்க வேண்டும். தட்சிணாமூர்த்தி வணங்கினாலே குருவின் முழு அனுகிரகம் அருளும் நமக்கு கிடைத்துவிடும் ஏன் தட்சிணாமூர்த்தி வணங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிபதியாக ஒரு தெய்வம் இருக்கும் அப்படி இருக்கையில் குரு பகவானுடைய கிரகத்திற்கு அதிபதி தெய்வமாக விளங்க கூடியவர் தான் இந்த தட்சிணாமூர்த்தி.

சிவன் ஆலயம்

குரு பகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உகந்த நாளான விளங்கக்கூடிய வியாழக்கிழமை அன்றைய தினம் நீங்கள் அசைவ உணவுகள் சாப்பிடாமல் விரதமிருந்து தட்சணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அப்படி நாம் விளக்கேற்றி வழிபபடும் தட்சிணாமூர்த்தியை சிவன் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவது இன்னும் சிறப்பானதாக இருக்கும் ஏனென்றால் குரு பகவான், தட்சிணாமூர்த்தி என இந்த இருவருக்கும் குருவாக விளங்கக்கூடியவர் ஈசனை அதனால் சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபடுவது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

தட்சிணா மூர்த்தி வழிபாடு

அப்படி நாம் சிவாலயத்திற்கு சென்று வழிபட வேண்டிய வியாழன் கிழமை காலையிலேயே குளித்து முடித்துவிட்டு கோவில் சென்று முதலில் ஈசனை வழிபட்டு முடித்த பின் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு சென்று அவருக்கு 24 தீபங்கள் நெய் அல்லது நல்லெண்ணெய் இந்த இரண்டு எண்ணெய்களில் ஏதாவது ஒரு எண்ணெய் ஊற்றி ஏற்றி வாருங்கள். இப்படி தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றிய பிறகு அவருக்கு நேர் எதிரே இருக்கும் குரு பகவானிடம் சென்று அவருக்கும் இரண்டு தீபம் ஏற்றி அதன் பின்பு நவகிரகங்களை சுற்றிவர வேண்டும்.

-விளம்பரம்-

வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்கும்

நீங்கள் இந்த வழிபாட்டை தொடர்ந்து மூன்று மாதங்கள் தவறாக செய்து வரும் பொழுது குருவின் பார்வை உங்கள் மேல் விழத் தொடங்கும் குரு பகவானின் அனுகிரகமும் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும் இதனுடன் சேர்த்து சிவபெருமானின் மற்றும் தட்சிணாமூர்த்தி அருள் ஆசியும் உங்களுக்கு நிரந்தரமாக கிடைப்பதற்கு வழிவகுக்கும். நீங்கள் இந்த வழிபாட்டை செய்து வரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் உங்களால் நம்ப முடியாத அளவிற்கு பல மாற்றங்கள் நடக்கும் பல வழிகளில் உங்களுக்கு பணம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும் அதை நீங்களே உணர முடியும்.

நீங்கள் இப்படி தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வியாழக்கிழமை அன்று வழிபடுவது முடிந்த அளவிற்கு காலை நேரத்தில் சென்று வழிபட பாருங்கள் நீங்கள் காலையில் இந்த வழிபாட்டை செய்யும்போது உங்களுக்கு இன்னும் நிறைய சிறப்பான பலன்களை கிடைக்கும். எந்த ஒரு செயலையும் நம் முழு நம்பிக்கையோடு விரும்பி செய்யும்போது அதற்கான பலன் நமக்கு அதிகமாகவே கிடைக்கும் என்பார்கள் அதுபோலத்தான் இந்த வழிபாட்டையும் மூழு நம்பிக்கையோடு செய்து பாருங்கள் உங்களுக்கும் நல்ல பலனை கிடைக்கும்.