ஒரு டம்பளர் நீர் இருந்தால் போதும் அடகில் இருந்த தங்க நகையை மீட்கலாம், மேலும் தங்கம் சேரும்!

- Advertisement -

நாம் அனைவரும் பணத்திற்கு அடுத்தார் போல் நம் வீட்டில் அதிகம் சேர்க்க வேண்டும் என விரும்பும் ஒரே பொருள் தங்கம் மட்டுமே. நாம் அனைவரும் இப்படி நினைப்பதற்கு காரணம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகும் தங்கத்தின் விலை தான். நம்மிடம் தங்கம் இருந்தால் போதும் அதைவிட பெரிய முதலீடு நமக்கு தேவைப்படாது, நமக்கு அவசர நிலையில் பணம் தேவைப்படும் போதெல்லாம் தங்கத்தை அடமானமாக வைத்து பணமாக எளிதில் நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். அப்படி நம் தேவைகளுக்காக அடமானம் வைத்த தங்க நகைகளை சில சமயம் நம்மளால் மீட்க முடியாமல் போய்விடும். அப்படி அடமானத்திற்கு போய் மீட்க முடியாமல் இருக்கும் தங்க நகைகளை மீட்பதற்கு என்ன செய்ய வேண்டும் ? மேலும் நம் வீட்டில் தங்கம் பெருகிக்கொண்டே இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ? என்பதனை நான்மையும் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

குருபகாவன், சந்திர பகவான் யோகம்

நம் தங்க நகையை தனியார் நிறுவனங்களில் வைத்து கடன் வாங்கினால் வட்டி விகிதம் அதிகமாக வரும் என்ற காரணத்தினால் தான் வங்கிகளுக்கு சென்று குறைவான நகை கடன் வட்டியில் தங்கத்தை அடகு வைப்போம். அடகு வைத்த தங்கத்தை நாம் எப்படியாவது திருப்பி விடுவோம் என்று தான் எண்ணுவோம். ஆனால் அதற்கு ஏற்ற வருமானம் ஒன்றும் பெரிதாக இல்லாத சமயங்களில் அந்த தங்கத்தை நம்மால் திருப்ப முடியாமல் போய்விடும். இருந்தாலும் நாம் அந்த தங்கத்தை ஏதாவது நல்ல காரணங்களுக்காக தான் அடமானம் வைத்திருக்கும் இப்படி அடகு வைத்த நகையை மீட்பதற்கும். மேலும் நம்மிடம் தங்க நகைகள் சேர வேண்டும் என்றாலும் குரு மற்றும் சந்திர பகவானின் யோகம் நமக்கு இருக்க வேண்டும்.

- Advertisement -

பௌர்ணமி

இந்த குரு பகவான் மற்றும் சந்திர பகவானின் யோகத்தை பெறுவதற்கு நாம் ஒரு சிறிய பரிகாரத்தை செய்ய வேண்டி இருக்கும். அதனால் இந்த குரு மற்றும் சந்திரன் யோகத்தை பெறுவதற்கு உகந்த தினம் பௌர்ணமி தினம்தான். இந்த தினத்தில் நம் நம்முடைய பரிகாரத்தை செய்யும் போது நமக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என தேவ சாஸ்திரங்களை கூறுகின்றன. அதனால் பௌர்ணமி நிலவு வரும் நாளில் உங்கள் வீட்டில் சந்திர ஔி வரும் இடத்தில் வைத்துதான் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும்.

சந்திர ஔியில் தங்கம்

இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு ஒரு கண்ணாடி பவுல் தேவைப்படும் அதை எடுத்துக் கொண்டு. உங்கள் வீட்டில் சந்திர ஔி படும் இடத்தில். இந்த பவுலை வைத்து அதில் தண்ணீர் நிரப்பி கொள்ளுங்கள் அப்படி தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பவுலில் உங்கள் வீட்டில் இருக்கும் தங்க நாணயம் அல்லது தங்க பிஸ்கட் போடுங்கள். இது எதுவும் இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் குண்டு மணி அளவில் தங்கம் அதாவது கம்மல் திருகாணி இதுபோன்று சிறிய அளவு தங்கத்தை போட்டு வைக்க வேண்டும். நாம் இப்படி தண்ணீரில் தங்கத்தை போட்டு வைக்கும் போது தங்கம் என்பது குரு பகவானை குறிக்கும் அப்படி நம்மிடம் இருக்கும் தங்கத்தின் மீது சந்திர ஔி படும்போது இந்த இரண்டு யோகமும் நமக்கு கிடைக்கும்.

தங்கத்தை பூஜை அறையில் வையுங்கள்

இப்படி கண்ணாடி பவுலில் போட்ட தங்கத்தை இரவு முழுவதும் சந்திர ஔி படும்படி வைத்துவிட்டு மறுநாள் காலை எழுந்தது அந்த தங்கத்தை எடுத்து தங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பவுலில் இருக்கும் தண்ணீரை உங்கள் வீட்டின் அனைத்து மூலைகளிலும் தெளித்து விடுங்கள். அன்றைய நாளில் நீங்கள் வீட்டை துடைப்பதாக இருந்தால் வீடு துடைக்க பயன்படுத்தும் தண்ணீரில் இந்த தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு குரு மற்றும் சந்திரனின் யோகம் கிடைக்கும். இதனால் அடகில் இருக்கும் மீட்க முடியாத உங்கள் நகையை கூட எளிதில் மீட்டு விடலாம். உங்கள் வீட்டின் பொருளாதார நிலை உயர்ந்து மேலும் கூட தங்கம் சேரும் நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

-விளம்பரம்-