முன்பெல்லாம் சாப்பிடுவதற்காக உழைந்து கொண்டிருந்தோம், ஆனால் இப்பொதல்லாம் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக உழைக்கிறோம். இனிமேலும் இப்படி வாழாமல் உழைத்த பணத்தை மகிழ்ச்சியுடனும், குடும்பத்துடனும் அனுபவிங்கள். உங்கள் தினசரி செலவுகளுக்காகவும், வசதியாகவும் வாழ்வதற்காக பணத்தை சம்பாதிக்காமல், உங்களுடைய மகிழ்ச்சிக்காகவும், உங்கள் குடும்பத்தின் சந்தோஷத்துக்காகவும் செலவிடும் படியாக திட்டம் போடுங்கள். நீங்கள் இதை செய்தால் உங்களுக்கு வேண்டிய பணத்தை சம்பாதிக்க முடியும்.
நம்முடைய சக்தியை நாம் எதை நோக்கி செலுத்துகிறோமோ, அதன் மூலமே நமக்கு வருமானமும், பணமும், செல்வமும் வந்து சேர்கிறது. எனவே நீங்கள் உங்களுடைய சக்தியை எதை நோக்கி செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் முதலில் தீர்மானிக்க வேண்டும். சிலருக்கு படிப்பால், சிலருக்கு பேச்சால், சிலருக்கு உடல் உழைப்பினால், சிலருக்கு சிந்தனையால், சிலருக்கு மொழியால், சிலருக்கு குரலினால் இப்படி ஓவ்வொருவரும் அவர்கள் சக்கியை வைத்து பணம் சம்பாதிக்கின்றனர். இப்படிப் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விஷயங்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது. நீங்கள் எந்த விஷயத்தின் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியுமோ, அந்த விஷயத்திற்காக மட்டுமே உங்களுடைய சக்தியை செலவு செய்ய வேண்டும்.
உதாரணமாக இப்பொழுது ஒருவருக்கு அவரின் பேச்சுத் திறமை நன்றாக இருக்கும் அடுத்தவர்களை பேசியை மயக்கிவிடுவார்கள். அவர்கள் பேசினால் தான் சம்பாதிக்க முடியும் இது போன்ற நபர்கள் எல்லாம் இடங்களிலும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் அதனால் மென்மேலும் பேச்சு திறமையை வளர்த்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அதே சமயம் பேச்சுக்கும் வருமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவர் வெறுமனே பேசிக் கொண்டிருப்பது தேவையற்ற விஷயம். நாம் பேசுவதிலும் கவணத்துடன் பேச வேண்டும் தேவையில்லாமல் பேசி நம்முடைய சக்தியை செலவிடக்கூடாது
முதலில் பேச வேண்டிய அவசியமே இல்லாத இடத்தில் பேச்சை தவிர்க்க வேண்டும். இப்படி உங்களுடைய சக்தியை சரியான திசையை நோக்கி திருப்பி விட முயற்சி செய்யுங்கள். மற்ற எல்லா விஷயங்களையும் உங்களுக்கு பிடித்தே போனாலும் அதை புறக்கணியுங்கள். ஒரு அளவுக்கு மேல் நம்முடைய ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது. இதனால் பணத்தை சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பணத்தை கொண்டு நாமும், நம்முடைய குடும்பமும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதை மணதில் வைத்து கொண்டு செயல்பட்டால் பணம் உங்களை தேடி வரும் நீங்கள் பணத்தின் பின்னால் போக வேண்டியதில்லை.