சண்டை சச்சரவு என வெறுப்பில் வாழும் கணவன் மனைவி ஒற்றுமையா வாழ இந்த பூ இருந்தால் போதும்!

- Advertisement -

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறுவார்கள். அதில் கணவன் மனைவி உறவு என்பது மிகவும் அற்புதமான ஒன்று ஆகும். நம்மைச் சுற்றி பல உறவுகள் இருந்தாலும் ஏனோ நம் கடைசி காலத்தில் நம் கூடையே வருவது நம் துணையே ஆகும். அப்படிப்பட்ட துணை சில பேருக்கு நல்லவிதமாக அமைந்து விடும், ஆனால் சிலருக்கு அதுவே பாதகமாக அமைந்து விடும் அவர்களுக்கிடையே சண்டை விவாதம் என்பது மட்டுமே இருக்கும்.

-விளம்பரம்-

அதற்கு காரணம் அவர்கள் மட்டும் இல்லை அவர்களுடைய நேரமும், மற்றவர்களுடைய கண் திருஷ்டியும் ஆகும். அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது அனைத்துமே சரியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் கணவன் மனைவி ஒற்றுமை குறித்து இந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ பரிகாரம்

பரிகாரத்தை நாம் செய்வதற்கு முதலில் பவளமல்லி வாங்க வேண்டும். இந்த இந்த பூவினை நாமும் பல இடங்களில் பார்த்திருப்போம், ஏன் பலரின் வீடுகளில் கூட இப் பூ வளர்க்கப்படுகிறது. இந்த அதிகாரம் செய்வதற்கு நாம் இந்த பூவினை கடையில் காசு கொடுத்து வாங்க கூடாது. இந்த பூ மரம் எங்கு இருக்கிறதோ அங்கு சென்று நாம் பறித்துக் கொண்டு வர வேண்டும். இந்த பூ தொட்டவுடன் கீழே விழும் தன்மையுடையது எனவே கீழே விழுந்த பூவை நாம் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. பூ மட்டுமல்லாமல் நமக்கு இந்த பரிகாரத்தை செய்வதற்கு இரண்டு வெள்ளி தாயத்துக்கள் தேவைப்படுகின்றன.

இந்த மலரை கொண்டு வந்த பின்னர் கணவன் மனைவி இருவரும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு இந்த பூவினை கொண்டு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் சிவன் பார்வதி சிலையின் முன் இப்பூவினை வைத்து மனதார வழிபட்டு அவர்களுடைய குறைகளை முன் வைக்க வேண்டும். பின் அப்பூவினை கொண்டு வந்து அவர்களது பூஜை அறையில் வைத்து விடவும். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தாயத்தில் இப்பூவினை உள்ளே வைக்கவும். ஒரு தாயத்தில் குறைந்தது 5 மலராது இருக்க வேண்டும் ஐந்திற்கும் மேலேயும் வைக்கலாம். அப்படி இரண்டு தாயத்திலும் பூவினை உள்ளே வைத்து இருவரும் கட்டிக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

பிரச்சனைகளை தீர்க்கும் தாயத்து

இந்த தாயத்தை கணவன் மனைவி இருவருமே கட்டிக் கொள்ள வேண்டும். இது கழுத்து, கை, இடுப்பு என உங்களுக்கு எப்படி கட்ட முடியுமோ அப்படி கட்டிக் கொள்ளலாம். ஆனால் இருவரும் கட்ட வேண்டியது அவசியம். இந்த தாயத்தை கட்டிய 5 வாரத்திற்குள்ளாகவே உங்களின் உறவுக்குள் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி அன்னோன்யம் கூட ஆரம்பிக்கும். இதை நீங்கள் கண் கூடாக உணர முடியும்.

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றால் இது போன்ற பரிகாரங்களை தான் செய்ய வேண்டுமா?

ஒருவர் ஒருவர் மனம் விட்டு சிறிது நேரம் அமர்ந்து பேசினாலே பிரச்சனைகள் சரியாகி விடும் தானே என தோன்றலாம். இது முற்றிலும் உண்மை தான் ஆனால் அவர்கள் இருவரும் அப்படி அமர்ந்து பேசுவதற்கான மனநிலை முதலில் அமைய வேண்டும். அதற்கான சூழ்நிலை மாற வேண்டும். அப்போது தான் இது சாத்தியமாகும்.

இந்த பரிகாரம் அதற்கான சூழ்நிலையை உருவாக்கி இருவரின் மனநிலையும் மாற்றி இருவருக்குள் இருக்கும் கசப்பை நீக்கி அன்னோனியத்தை உருவாக்கக் கூடிய அற்புதமான பரிகாரம். எனவே பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருப்பினும் இதனை உங்கள் வீட்டில் செய்து பார்வதி மற்றும் சிவனின் அருளை பெற்று தம்பதியாக வாழுங்கள்

-விளம்பரம்-