1 ரூபாயை இந்த பையில் வைத்தால் போதும் லட்ச கணக்கில் திரும்ப கிடைக்கும்! தங்கம் வைத்தாலும் பல மடங்காக பெருகும்!

- Advertisement -

பணத்தை சம்பாதிப்பதற்கு தான் நாம் பெரும்பாடு படுகிறோம், என்னதான் நாம் பாடுபட்டு அந்த பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணத்தை பல மடங்காக ஆக்குவதற்கு நமக்கு வழிகள் தெரியவில்லை. இப்படி நம்முடைய பணம் பல மடங்காக பெருக கூடிய வாய்ப்பை அருளும் ஒரு அற்புதமான தகவலை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் அறிந்து கொள்ளப் போகிறோம்.

-விளம்பரம்-

முன்னோர்களின் மஞ்சப்‌பை

நம் முன்னோர்களை பின்பற்றினால் நாமும் பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். அதில் ஒன்றுதான் மஞ்சப்பை பயன்படுத்துவது. சில இடங்களில் கூட நம்மளால் காண முடியும் அதாவது பெரியவர்கள் பத்திரிக்கை வைக்க செல்லும் பொழுது அவர்கள் இந்த மஞ்சள் பையை தான் கொண்டு செல்வார்கள். அந்த அளவு இந்த மஞ்சப்பை அவர்களது வாழ்வில் நீங்கா இடம் பெற்றது.

- Advertisement -

ஆனால் இப்பொழுது யாராவது மஞ்சள் பையை கொண்டு சென்றார்கள் என்றால் நாமலே கேளிக்குறிய பொருளாக தான் பார்க்கிறோம். ஆனால் விஷயம் என்னவென்றால் மஞ்சப் பையில் நாம் எதையாவது வைத்தால் அது பல மடங்காக பெறுவோம் என்பது தான் உண்மை. அதனால்தான் பெரியவர்கள் நகை, வீட்டு பத்திரம், பணம் என எது வைத்தாலும் மஞ்சை பையில் வைத்து சுருட்டி பீரோவில் வைத்து விடுவார்கள். ஏனெனில் இந்தப் பையில் வைக்கும் நகை பணம் எப்படி பெருகிறதோ, அதை போல இதில் பத்திரங்களை வைக்கும் போது மேலும் சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகத்தையும் கொடுக்கும்.

மஞ்சள் நிறமானது புதன் கிரகத்திற்குரியது

புதன் பார்க்கின் கோடி நன்மை என்ற பொருளுக்கு ஏற்ப புதகிரகத்தின் அனுகிரகம் கிடைத்து விட்டால் பலவித நன்மைகள் நமக்கு ஏற்படும் என்பது அனைவரும் தெரிந்ததே. அந்த வகையில் புதன் கிரகத்தின் அனுகிரக நிறமான மஞ்சள் நிறத்தை கொண்ட இந்த மஞ்சள் நிற துணிப்பையில் நீங்கள் பணத்தை வைத்து எடுத்து புழங்கும் பொழுது அது நிச்சயம் பெருகுவதற்கான வாய்ப்பை கொடுக்கும். இதற்கு மஞ்சள் நிற துணிப்பையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். வேறு பைகளை மஞ்சள் நிறத்தில் பயன்படுத்துவதால் எந்த பலனும் கிடைக்காது.

இந்த காலத்தில் பலரும் லெதர் பைகளை தான் பயன்படுத்துகிறார்கள். அதை மற்ற தேவைகளுக்காக பயன்படுத்தலாம் ஆனால் பணம் வைப்பதற்காக அதை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் உண்மை. அதேபோல திருமணம் அல்லது விசேஷ வீடுகளில் தரும் மஞ்சள் பையில் நமது பணத்தை வைக்க கூடாது. அதற்கான பலன் நமக்கு வராது என்றும் அது கொடுத்தவர்களுக்கு தான் சென்று சேரும் என்றும் கருதப்படுகிறது. சமயபுரம் மாரியம்மன் புகைப்படம் பதித்த மஞ்சள் பையை பயன்படுத்தினால் மிகவும் விசேஷமாக இருக்கும். ஒரு வேலை அந்த மஞ்சப்பை கிடைக்கவில்லை என்றால் வேறு சாமி புகைப்படங்கள் பதித்த மஞ்சள் பையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களை நாமும் முறையாக தெரிந்து கொண்டு பின்பற்றினாலே பல வகையில் நன்மைகளை அடைய முடியும் என்பதற்கு இந்த மஞ்சள் பை ஒரு நல்ல உதாரணம். இந்த பதிவின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதனை நீங்களும் பயன்படுத்தி உங்கள் வாழ்வில் நல்ல பலனை அடையலாம்.

-விளம்பரம்-