Home ஆன்மிகம் ஆடி மாதம் முடிவதற்குள் இந்த 1 பொருளை குலதெய்வ கோவிலுக்கு தானமாக கொடுத்து விடுங்கள்! வீட்டில்...

ஆடி மாதம் முடிவதற்குள் இந்த 1 பொருளை குலதெய்வ கோவிலுக்கு தானமாக கொடுத்து விடுங்கள்! வீட்டில் அதிசயங்கள் நடக்கும்!

ஆடி மாதம் பிறந்து விட்டது, ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அம்மனுக்காக இம்மாதத்தில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதிலும் ஆடி வெள்ளி மற்றும் ஆடிச் செவ்வாய் என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அவ்வேளையில் அம்மனை காண்கையில் அலங்காரத்துடன் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இவ் ஆடி மாதத்தில் நம் குல தெய்வத்திற்கு ஒரு பொருளை தானமாக வழங்கினால் நம் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். அது என்ன என்பது பற்றியும், எப்படி வழங்க வேண்டும் என்பதனை பற்றியும் இப்ப பதிவில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

ஆடி மாதம் முடிவதற்குள் குலதெய்வ கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்

குடும்பத்தில் எல்லாம் இனிமையாக நடக்க வேண்டும். எல்லாம் சந்தோஷமாக நடக்க வேண்டும். வீட்டில் சுபகாரிய தடை விலக வேண்டும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருகிறது. மருத்துவ செலவு. மருந்து மாத்திரை சாப்பிடாத நாளே இல்லை. தீராத நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். இப்படி பல வகைப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒரு தானம் தான் இது.

குலதெய்வ கோயிலுக்கு இந்த ஆடி மாதத்தில் வெல்லத்தை வாங்கி தானமாக அளியுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் வெல்லத்தை தானமாக அளிக்கலாம். அது உங்களுடைய வசதியை பொருத்தது. வெல்லம், கருப்பட்டி வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றையும் கூட நாம் தானமாக வழங்கலாம். இதனை ஆடி மாதத்தில் செய்யப்படும் பிரசாதமாக வழங்கப்படும் சர்க்கரைப் பொங்கலுக்கு பயன்படுத்தி கொள்வார்கள்.

குடும்ப நிலையை மாற்றும் வெல்லம்

குலதெய்வம் அம்மனாக இருந்தால் அந்த குல தெய்வத்திற்கு இந்த வெல்லத்தை வாங்கி தானம் கொடுக்கலாம். எங்கள் வீட்டு குலதெய்வம் முருகர் பெருமாள் அல்லது முனீஸ்வரர் இந்த மாதிரி இருந்தால் என்ன செய்வது. இந்த ஆடி மாதத்தில் உங்கள் குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி, அம்மன் கோவில்களுக்கு இந்த வெல்லத்தை நீங்கள் தானமாக கொடுக்கலாம் தவறு எதுவும் கிடையாது.

உங்கள் குடும்பத்தில் ஒருவர் இப்படி கோவிலுக்கு தானமாக வழங்கும் பொழுது உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் பரந்துவிடும் என்று நம்மப்படுகிறது. உங்கள் கஷ்டம் கரைந்து போக வெள்ளத்தை ஒரு சிறு துண்டு எடுத்து அதனை கோவில் குளத்தில் என் கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போக வேண்டும் என்று நினைத்து கரைத்தால் நமது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும். எனவே குடும்பத்துடன் இந்த ஆடி மாதத்தில் உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

-விளம்பரம்-

வாழ்க்கை இனிப்பாக மாறும்

அந்த வெல்லம் தண்ணீரில் எப்படி கரைந்து போகிறதோ அதேபோல உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டமும் கரைந்து போகும் என்பது தான் இந்த பரிகாரத்தில் இருக்கும் நம்பிக்கை. அதேபோல வெல்லத்தை கோவிலுக்கு தானம் கொடுக்கும் போது அந்த இனிப்பான வெல்லம் உங்களுடைய கசப்பான கஷ்டத்தை சரி செய்து விடும் என்பதும் இதனுடைய தாத்பரியமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இப்பதிகாரத்தின் மீது நம்பிக்கை இருப்பவர்கள் இதனை செய்து அம்மன் ஆசை பெற்று நல்வாழ்க்கையை வாழுங்கள்.