இந்த செடி எந்தளவு செழிப்பாக வளர்கிறதோ! அந்த அளவுக்கு சந்தோஷமும் இருக்கும்!

- Advertisement -

பொதுவாக நம் வீட்டில் வளர்க்கும் செடிகள் அழகுக்காக செடி வளர்ப்போம் இல்லை நம் வீடு பச்சை பசேல் என்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக சிலர் வீடு முழுக்க செடிகளை நட்டு வைத்திருப்போம். இருந்தாலும் சில செடிகளை நம் வீட்டில் நட்டு வளர்க்கலாம் வளர்க்க கூடாது என்று வகைப்படுத்தப்பட்டு சாஸ்திரம் நமக்கு கூறியிருக்கிறது. இருந்தாலும் ஒரு சிலர் அவர்களின் ராசிக்கு ஏற்ப, அவர்களின் மன நிறைவுக்காக வேண்டிய ஒரு சில செடிகளை நட்டு அவர்கள் வீட்டில் வளர்ப்பார்கள். இதில் ஒன்றும் தவறு இல்லை நாமும் அந்த வகையில் நம் தாராளமாக வீட்டில் நட்டு வளர்க்க கூடிய ஒரு செடியை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அந்த செடி வளர்ப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கப் போவது என்பதை நான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

சுபிக்ஷம் தரும்

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கிறது மல்லிகை பூச்செடி தான். நாம் என்னதான் வீட்டில் பல செடிகள் வளர்த்தாலும் மல்லிகை பூ போன்று வராது ஏனென்றால் மல்லிகை பூ என்பது லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பூ. நாம் மல்லி விலை ஏறினாலும் இறங்கினாலும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல். நம் வீட்டில் பூஜை செய்வதற்காக வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் இன்றளவும் மல்லிகை வாங்குகிறோம் என்றால் அதற்கு காரணம் நம் வீட்டில் மல்லிகை பூ வைக்கும்போது அது நம் வீட்டிற்கு ஒரு சுபிக்ஷத்தை தரும். அதனால் மல்லிகை பூ கிடைக்கும் போதெல்லாம் பெண்களும் தங்கள் தலையில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பீடை, எதிர்மறை ஆற்றல் விலகும்

இப்படி மல்லிகை பூ கிடைக்கும் போதெல்லாம் அதை வாங்கி நம் வீட்டின் பூஜை அறையில் இருக்கும் சாமி படங்கள் முதற்கொண்டு வீட்டில் மாட்டி இருக்கும் நம் முன்னோர்கள் படங்கள் வரை அனைத்திற்கும் மல்லிகை பூவை கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். இப்படி நாம் மல்லிகை பூவை கொண்டு வீடுகளுக்கு அலங்காரம் செய்யும் போது இந்த மல்லிகை பூவின் வாசம் நம் வீட்டில் குடியிருக்கும் பீடை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் என அனைத்தையும் வெளியேற்றிவிடும். இப்படி இந்த மல்லிகை பூச்செடி நம் வீட்டில் வளரும்போது இதனால் நமக்கு எத்தனையோ நன்மைகள் கிடைக்கும்.

சிறிது இடம் இருந்தால் போதும்

அதனால் உங்கள் வீட்டில் சிறிது இடம் இருந்தாலும் அது முன்புறமாக இருந்தாலும் சரி பின்புறமாக இருந்தாலும் சரி அந்த இடத்தில் ஒரு மல்லிகை பூச்செடியை நட்டு வையுங்கள் இல்லையென்றாலும் ஒரு சிறிய தொட்டி வாங்கி அதில் இந்த மல்லிகை பூச்செடி நட்டு வைத்து வளர்த்து வாருங்கள். முடிந்த அளவிற்கு பூமியில் இந்த செடியை நட்டு வளர்க்க பாருங்கள் இப்படி இந்த மல்லிகை பூ செடியை நீங்கள் பராமரித்து வளர்த்து வரும் போது அதில் எந்த அளவிற்கு மளிகை பூக்கள் பூத்து குலுங்குகிறதோ அந்த அளவிற்கு வீட்டிலும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமாக இருக்கும்.

பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது

இப்படி இந்த மல்லிகை பூச்செடியே வீட்டில் வளர்க்கும் போது உங்கள் வீட்டில் காசு பணத்திற்கு ஏற்றங்கள் குறைவுகள் இருந்தாலும் உங்கள் வீட்டில் இருக்கும் சந்தோஷத்திற்கு என்றுமே பஞ்சம் இருக்காது என்று என்னாள் அடித்து சொல்ல முடியும் அந்த அளவிற்கு இந்த மல்லிகை பூ வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும். இந்த மன நிம்மதியை நீங்கள் எவ்வளவுதான் காசு கொடுத்தாலும் ஒருவருக்கும் வாங்கி கொடுக்க முடியாது நீங்களே நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here