ஒன்னும்மில்லாத ஒருவனிடம் கூட பல தலைமுறைக்கு தேவையான பணம் சேரும் இந்த 1 பொருள் இருந்தால்!

- Advertisement -

கஷ்டப்பட்டு எப்படியாவது நிறைய பணம் சம்பாதித்து விட வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் பல ஆண்கள் பணத்தின் மீது உள்ள ஆசையால் மட்டும் தான் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்களா என்று பார்த்தால் உண்மை கிடையாது. அவர்கள் சந்ததியும் அவர்களுக்கு பின்வரும் சந்ததியும் நலமாக இருக்க வேண்டும் அதற்காக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஒரு தூய்மையான எண்ணம் மட்டுமே அதற்கு காரணம். ஆனால் இன்று பலர் தன் அப்பா, தாத்தா சம்பாதித்த சொத்துக்களை வைத்துக் கொண்டு நான் பெரிய பணக்காரன் என்று தம்பட்டம் அடித்து கொண்டு இருப்பார்கள். நம்மிடமும் பணம் சேர வேண்டும் நம்மளும் பல தலைமுறைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

ஜாதிக்காய்

பொதுவாக ஜாதிக்காயில நாம் அறியாத அபரிவிதமான மருத்துவ குணங்கள் உண்டு என்றும் அதற்கு ஈடான மருந்து பொருள் இல்லை என்று அதன் மகத்துவம் நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இதே ஜாதிக்காயை நம் முன்னோர்கள் நம்முடைய செல்வ வளங்களை பெருக்கிக் கொள்வதற்கு பயன்படுத்தி வந்தார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா ? நாம் இந்த ஜாதிக்காயை வைத்து எளிமையான பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்மிடம் பல தலைமுறைகளுக்கான பணம் சேர்வது மட்டுமில்லாமல் அந்த பணம் நம்மிடம் நிலையாக இருக்கும் படி செய்யும்.

- Advertisement -

ஜாதிக்காய் எண்ணெய்

ஜாதிக்காயிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது என்பது உங்களில் எத்தனை பேர்க்கு தெரியும் ? ஆம் இந்த ஜாதிக்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயிலும் மகத்துவம் இருக்கிறது. இந்த ஜாதிக்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வீட்டில் நாம் விளக்கேற்ற பயன்படுத்தும் எண்ணெயுடன் கலந்து விளக்கேற்றும் பொழுது நமது வீட்டில் செல்வம் வளம் செழித்துக் குலுங்கும். அதனால் ஒரு மண்ணால் செயல்பட்ட அகல் விளக்கு எடுத்துக்கொண்டு அதில் நல்லெண்ணெய் மற்றும் ஜாதிக்காயின் என்னையே கலந்து ஊற்றி. அதில் திரி போட்டு தீபம் ஏற்றி அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டும் பல தலைமுறைக்கு தேவையான பணம் சேர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

குபேர விளக்கு

அதேபோல் சில பேர் வீட்டில் பணம் சேர வேண்டும் என்பதற்காக வியாழன் கிழமை குபேர தீபத்தை ஏற்றுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி குபேரர் தீபத்தை ஏற்றும விளக்கில் நெய், எண்ணெய் என எது ஊற்றி விளக்கேற்றினாலும், சரி அதில் இந்த ஜாதிக்காய் எண்ணெயையும் கலந்து தீபம் ஏற்றி குபேரரை மனம் உருகி வேண்டும் பொழுது குபேரரின் பரிபூரண அருளும் உங்களுக்கு கிடைக்கும் உங்கள் வீட்டிலும் பணம் பெருகும். அதேபோல் உங்கள் வீட்டில் பணம் வைத்து எடுத்து இடங்களில் அல்லது தொழில் நடத்தும் இடங்களில் உள்ள கல்லாப்பெட்டியில் எப்போதும் ஒரு ஜாதிக்காயை போட்டு வைப்பதன் மூலம் பணம் புழக்கம் அந்த இடத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

நிலைவாசல்

மேலும் நம் வீட்டின் நிலை வாசலில் தேங்காயை கட்டி தொங்க விட்டிருப்பார்கள் அல்லவா அதேபோல் ஒரு சிவப்பு துணியில் மூன்று ஜாதிக்காயை வைத்து அதை ஒரு முடிச்சாக முடிந்து நமது வீட்டின் நிலை வாசலில் கட்டி விட்டால் போதும் உங்கள் வீட்டிற்குள் எப்பொழுதும் கெட்ட சக்தி, துர் சக்தி என எதுவும் நுழைய முடியாது அதனால் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள் அதுமட்டுமில்லாமல் வேலைக்குப் போக வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் சக்தி இந்த ஜாதிக்காய்க்கு உண்டு.

-விளம்பரம்-

பல தலைமுறைக்கு பணம் சேரும்

இப்படி மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு ஜாதிக்காய் மற்றும் ஜாதிக்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயன்படுத்தி இந்த ஆன்மீக பரிகாரங்களை எல்லாம் சரியான முறையில் செய்து வந்தால் உங்களிடம் பல தலைமுறைக்கு தேவையான சொத்துகளும் பணமும் சேர்ந்து விடும் அதற்காக கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் இந்த ஜாதிக்காய். எந்த ஒரு செயலையும் முழு நம்பிக்கையோடு ஆத்மார்த்தமாக செய்யும்போது அதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்பார்கள். அதேபோல இந்த பரிகாரங்களையும் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here