இந்த ஒரு செடி வீட்டில் இருந்தால் வறுமை என்பதே இந்த ஜென்மத்திற்கே வராதாம்!

- Advertisement -

வீட்டில் பணக்கஷ்டம், பொருளாதார குறைபாடு, வரவுக்கு மீறிய செலவு, அதிர்ஷ்டமின்மை, வீட்டில் சண்டைகள், பிரச்சனைகள், மன நிம்மதி இன்மை, ஒரு விஷயத்தில் வெற்றி பெறுவதற்கு போராட்டம் என நிறைய பிரச்சனைகள் இருக்கிறதா? முதலில் நீங்கள் வீட்டில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் வீடு முறைப்படி வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைக்கப்பட்டு இருக்கிறதா ? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அது மட்டும் அல்லாது குளியலறை, பூஜை அறை, சமையலறை, படுக்கையறை என அனைத்தும் எந்தெந்த மூலையில் இருக்கின்றன.

-விளம்பரம்-

பொருள் வைக்கும் இடம் பணம் வைக்கும் இடம் எந்த இடத்தில் நாம் வைத்திருக்கிறோம். எந்த திசையில் வைத்திருக்கின்றோம் என்பவைகளை பற்றி எல்லாம் தெளிவாக தெரிந்து கொண்டு பிறகு அதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும்.  காரணம் ஒரு இடம் வாஸ்து சாஸ்திரத்தின் படி அமையவில்லை என்றால் அங்கு  நேர்மறை செயல்களுக்கு பதிலாக எதிர்மறை விளைவுகள் நடைபெறும். அப்படி நடைபெறுவதை தான் இந்த பணக்கஷ்டம் ,பணவரவின்மை, ஆரோக்கிய குறைபாடுகள், கடன் சுமை அதிகரித்தல், வரவுக்கு மீறிய செலவுகள், மன நிம்மதியின்மை போன்றவைகளை எல்லாம் தகர்த்தெறிய வேண்டும் என்றால் விடாமல் முயற்சியோடும் இந்த வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் அமைப்பு இருக்கிறதா ?என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஜேட் செடி

வீடு அமைப்பு சரியாக இருந்தும் நமக்கு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது என்றால் நாம் அதற்கு சில தீர்வுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவைகளை வாஸ்து சாஸ்திர முறைப்படி செய்து கொண்டால் மிகவும் நல்லது. இந்த வாஸ்து சாஸ்திரப்படி என்ன செயல்களை செய்தால் மீண்டும் பணவரவும், நிம்மதியும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . வாஸ்து சாஸ்திரத்திற்கு நிறைய வாஸ்து பொருட்களை வாங்கி வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால் சிலருக்கு வாஸ்து பொருட்களை வைத்து தொடர்ந்து வழிபடுவது சிரமமாக இருக்கும் . அப்படிப்பட்டவர்கள் வாஸ்து செடிகளை வாங்கி வீட்டில் வைத்து வளர்க்கலாம்.அந்த செடியை வாஸ்து நிபுணர்கள் எப்படி அழைக்கிறார்கள் ?

இது போன்ற  தகவல்களை இந்த பதிவில் காணலாம்.இந்த வகை செடிகள் பராமரிப்பிற்கு மிகவும் எளிமையானவையாக இருக்கும். காரணம் இச்செடிகளுக்கு நீர் அவ்வளவாக தேவைப்படாதம் நேர குறைவின்மையால் தொடர்ந்து செடிகளை பராமரிக்க முடியாதவர்கள் அடிக்கடி வெளியூர் செல்பவர்களாக இருந்தால் நாம் கொடுக்கும் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு அந்த செடிகள்  ஒரு சில நாட்கள் வளர்ச்சியில் தாக்குப்பிடித்துக் கொள்ளுமாம். அப்படிப்பட்ட செடிகளில் ஒன்றுதான் ஜேட் செடி . இந்த வாஸ்து செடி செல்வத்தை ஈர்க்கக் கூடியது. மன நிம்மதியை கொடுக்கக்கூடியது. பணவரவை அதிகரிக்க கூடிய செடி. இந்த செடிகளை வீட்டில் முன் வளர்ப்பதும் நல்ல பலனை தரும். அப்படிப்பட்ட ஜேட் செடியை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். 

-விளம்பரம்-

பணவரவை அதிகரிக்கும் செடி

ஜேட் செடி வகை பணத்தை ஈர்க்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். இந்த செடி அதிக அளவு பராமரிப்பையும் எதிர்பார்ப்பதில்லையாம். தாங்கள் நேரக் குறைவின்மையால் செடிகளை வளர்ப்பதும் அதன் நேரம் ஒதுக்காமல் இருப்பவர்களாக இருந்தாலும் பரவாயில்லை இல்லை நீர் அதிகம் ஊற்ற மறந்து விடுபவர்களாக இருந்தாலும் பரவாயில்லை இந்தச் செடிக்கு தண்ணீர் அவ்வளவாக ஊற்ற வேண்டாமாம் . இந்த செடி குறைந்த நீரிலேயே நன்றாக வளர்ந்து வருமாம். இந்த செடியை வாசலுக்கு முன்பு வைப்பது மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படுகின்றது.

வாயிலில் வைக்கப்படும் ஜேட் செடி எதிர்மறை எண்ணங்களை விரட்டுவதோடு நேர்மறையான எண்ணங்களையும், பணவரவையும், மன நிம்மதியையும், வெற்றி பெறுவதற்கான வழிகளையும் காந்தம் போல் இருக்கும் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட இந்த வாஸ்து செடிகள் வளர்ப்பதின் மூலம் நமக்கு பணத்தை காந்தமாக இருக்கும் தன்மையும் பணம் வரவு அதிகரிக்கிறது. செலவு குறைவது மட்டுமல்லாமல் சேமிப்பு அதிகரிப்பது ஒரு செயலில் வெற்றி கிடைப்பது போன்றவைகள் எல்லாம் நடைபெறும். கிராஸ்ஸுலா ஒவாடா என்று கூறப்படும் ஜேட் செடி அமைதி, நிம்மதி மற்றும் பாசிடிவ் எனர்ஜியை அதிகரிக்கும். அது மட்டுமல்ல, இந்த செடி, பணத்தை காந்தம் போல ஈர்க்கும் தன்மையைக் கொண்டதாகும்.

பண சிக்கல்களையும் நீக்கும்

இந்த ஜேட் செடி பணவரவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டில் நிம்மதி, அதிர்ஷ்டம், மன அமைதியையும் கொடுக்கிறது. இந்த செடி பணத்தை ஈர்கக்கும். ஆகையால் வீட்டின் முன்பு அல்லது வீட்டின் வாசலில் வைத்து வளர்த்து வருவது பணத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் பண சம்பந்தப்பட்ட சிக்கல்களை நீக்கி நிதி நிலைமையை சரி செய்கிறது. வணிகத்தில் உள்ள தடைகளையும் நீக்கும். எதிரிகள் மற்றும் தடங்கல்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டது. தொழில் மற்றும் செய்யும் வேலையில் பிரச்சினை என்றாலும் , வணிகம் ஒழுங்காக செல்லவில்லை என்றாலும் கூட இந்த செடியை வளர்த்து அதனோடு விடாமுயற்சியோடு உழைத்து லாபம் அடையலாம்.

-விளம்பரம்-