காடை குழம்பு தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. காடை குழம்பு பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு ஒரு அசத்தலான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் பரோட்டா காடை குழம்பு காம்பினேஷன்க்கு பலரின் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. சன்டே போன்ற வார விடுமுறை தினங்களில், நாம் அனைவரும் வழக்கமாக அசைவ உணவுகளை சமைத்தோ அல்லது வெளியில் ஆர்டர் செய்தோ குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வோம்.
அப்படி நாம் சமைக்கும் உணவுகளில் , அநேகமாக மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி போன்ற உணவுகள் தான் அதிகமாக இருக்கும். நீங்கள் சற்று வித்தியாசமாக அசைவ உணவை செய்து சுவைக்க நினைத்தால், அதற்கு தென்இந்திய ஸ்பெஷல் ரெசிபியான காடை குழம்பு சிறந்த தேர்வாக இருக்கும். இன்று வித்தியாசமாக, காடை குழம்பு செய்து சாப்பிடலாமா? இதனை பிரியாணி, நாண், சப்பாத்தி என் அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் விதத்தில் சுவை அருமையாக இருக்கும்.
வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பிசாப்பிட்டு அடிக்கடி செய்யுமாறு கேட்பார்கள். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியைவிடக் கூடுதல் உயிர்ச்சத்துப் பயனும் உள்ளது. குறைந்த கொழுப்புள்ள காடை, கோழி பிரியர்களுக்கு பரிசு. இதை வெறுமனே ரசித்து உண்பதற்கும் ஒரு கூட்டமே இருக்கத்தான் செய்கிறது. வழக்கமாக மட்டன், சிக்கன், மீன் என எப்போதும் ஒரே மாதிரியே சாப்பிடும் நீங்கள் இந்த காடை குழம்பை ட்ரை பண்ணி பாருங்கள்.
காடை குழம்பு | Kaadai Kulambu Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 4 காடை
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
அரைக்க
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 10 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 2 டீஸ்பூன் மல்லி தூள்
செய்முறை
- முதலில் காடையை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், மிளகு, மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு, மல்லித்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும்.
- நாம் அரைத்து வைத்துள்ளவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி நாம் அரைத்த விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு பச்சை வாசனை போற அளவுக்கு கொதிக்கவிடவும்.
- பின்னர் காடை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். காடை வெந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் சூடான காடை குழம்பு தயார்.