- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களை காட்டிலும் கையேந்தி பவன்களில் இருக்கும் ருசியும் தரமும் மக்களை கவர்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் ரோட்டுக்கடையில் பரிமாறப்படும் காடை முட்டை மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம். நாட்டு கோழி முட்டையை விட காடை முட்டையில் அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.
மதிய வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. கோழி முட்டையைக் காட்டிலும் 4 மடங்கு காடை முட்டையில் விட்டமின் பி1 உள்ளது. அதேபோல் 15 மடங்கு விட்டமின் பி2 உள்ளது. காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை தூண்டி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்கிறது. கோழி முட்டைகளை நாம் அதிகமாக உண்டு வந்தாலும், அளவில் சிறியதாக காணப்படும் காடை முட்டையில் உள்ள சத்துக்கள் ஏராளம்.
சிலர் முட்டையை எப்படி செய்து கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அவிச்ச காடை முட்டை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள். எனவே காடை முட்டை விரும்பி சாப்பிடணும்னா, இப்படி மசாலா செய்து பாருங்கள். இந்த காடை முட்டை மசாலா செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். காடை முட்டை மசாலா அருமையான சுவையில் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்துப் பாருங்கள், எவ்வளவு சாப்பாடு இருந்தாலும் பத்தவே பத்தாது! அவ்வளவு சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : இதற்காக ஒரு முறை காடை முட்டை வாங்கி குழம்பு செஞ்சி பாருங்க! அடா அடா என்ன சுவை என்ன சுவை ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
முதலில் காடை முட்டையை வேக வைத்து ஓடு நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
பின் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும். பின் வேகவைத்த முட்டையை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
தண்ணீர் சுண்டி வந்ததும் இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ரோட்டுக்கடை காடை முட்டை மசாலா தயார்.






