- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் சுவையான கதம்ப சாதம் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். உங்கள் வீட்டில் அடிக்கடி சாம்பார் சாதம் செய்வீர்களா? நீங்கள் வைக்கும் சாம்பார் சாதம் அவ்வளவு ருசியாக இருக்காதா? கல்யாண வீடுகளில் செய்யும் கதம்ப சாம்பார் சாதம் மட்டும் எப்படி அவ்வளவு ருசியாக உள்ளது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
இந்த சாம்பார் சாதத்தை எப்படி சிம்பிளாகவும், ஈஸியாகவும் செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம். இந்த சாம்பார் சாதத்துடன் அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும். ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள் 20 நிமிடங்களில் ஒரு சூப்பரான சாதம் ரெடி ஆகிடும் அதுவும் சுவையாக இருக்கும்.
பொதுவாக குழந்தைகள் மதிய உணவிற்கு தயிர் சாதம், லெமன் சாதம், புளி குழம்பு சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸூக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்து விடுங்கள் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி. இப்போது சுவையான கதம்ப சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : பழைய சாதம் போண்டா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க பழைய சாதம் வீணாகாது!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து அதனுடன் புளி தண்ணீர், காஷ்மீர் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும்.
ஒரு குக்கரில் ஊற வைத்த பச்சரிசி, துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுக்கவும்.
அதன்பிறகு வேகவைத்த சாதத்தை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து அதனுடன் அரைத்த வைத்துள்ள மசாலாவை சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து பொரிந்ததும் சாதத்துடன் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கதம்பம் தயார்.






