Home ஆன்மிகம் கழுத்தை நெரிக்கும் கடன் பிச்சனை தீர்ந்து பண வரவு அதிகரிக்க! வெறும் கிராம்பு இருந்தால் போதும்!

கழுத்தை நெரிக்கும் கடன் பிச்சனை தீர்ந்து பண வரவு அதிகரிக்க! வெறும் கிராம்பு இருந்தால் போதும்!

கடன் வாங்குவது ஒன்றும் தவறான செயல் இல்லை இந்த பூமியில் வாழும் பெரும்பாலான மனிதர்களும் வாழ்நாளில் ஒரு முறையாவது அடுத்தவர்களிடம் கடன் வாங்கிய தான் ஆக வேண்டும். ஆனால் சில மனிதர்களுக்கு அவர்கள் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய கடன் சுமையை அவர்கள் சுமக்க வேண்டி இருக்கும். அவர்கள் நினைத்தாலும் உடனடியாக அந்த கடனை அடைக்க முடியாது அவ்வளவு பெரிய தொகையாக இருக்கும் இருந்தாலும் உங்களிடம் இருக்கும் கடன் பிரச்சினை தண்ணீர் போல் கரைந்து போனால் எப்படி இருக்கும். அதற்கு உங்களுக்கு தேவை அதிர்ஷ்டம் அந்த அதிர்ஷ்டத்தை உங்களுக்கு தந்து உங்கள் கடனை கரைப்பதற்காக ஆன்மீகத்தில் இதற்கு ஒரு பரிகாரம் இருக்கிறது அதைப் பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

இந்த பரிகாரத்தை ஏதாவது ஒரு வாரம் வெள்ளிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். அதுவும் காலையில் ஆறு மணிக்கு இந்த பரிகாரம் செய்யும் பொழுது அது சக்தி வாய்ந்த பரிகாரமாக இருக்கும். அதற்கு முதலில் ஒரு 27 கிராம்பை எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு என்னுடைய கடன் முழுவதுமாக அடைக்கப்படும். அதற்கு தேவையான பணத்தை இந்த பிரபஞ்சம் எனக்கு தரும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பின் உள்ளங்கையில் வைத்த கிராம்பை மறந்தும் கூட தரையில் வைக்காமல் எச்சில் படாமல் இருக்கும் ஒரு புதிய கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு ஒரு சிவப்பு நிற நூலை எடுத்துக்கொண்டு அந்த நூலில் பூ கட்டுவது போல சிறிது இடைவெளி விட்டுவிட்டு கிராம்பை கட்டி ஒரு மாலையாக செய்து கொள்ளுங்கள். இப்படி தயார் செய்த கிராம்பு மாலையை தப்பி தவறி கூட தரையில் வைத்து விடாதீர்கள். உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் அல்லது கோவில்களில் துளசி செடி இருக்கும் அல்லவா அங்கு சொல்லுங்கள். எதுவும் முடியாத பட்சத்தில் ஒரு கையளவு துளசி இலைகளை எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள்.

துளசி செடியின் முன்பு மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு ஏற்றி பின் நான் தயார் செய்த கிராம்பு மாலையை கையில் வைத்துக் கொண்டு. “எனது கடன் அடைந்து நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று துளசி தேவியை வேண்டிக் கொண்டு” அந்த கிராம்பு மாலையை துளசி செடியின் மேல் போட்டு வைத்தால் உங்களின் வாழ்வில் உள்ள கடன் தொகையை அடைப்பதற்கு ஏற்றவாறு உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்து. நீங்களும் உங்கள் கடன் தொகையை முழுவதுமாக அடைத்து அதிலிருந்து விடுபட்டு நீங்களும் சாதாரண மனிதர்களை போல் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்வீர்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here