வட்டி மட்டும் கட்டும் நீங்கள் கடன் பிரச்சனையில் இருந்து மீள! இந்த ஒரு செடி வீட்டில் இருநதால் மட்டும் போதும்!

- Advertisement -

பொதுவாக என்னதான் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வேலைக்கு சென்று சம்பாரித்தாலும் இன்றைய நாட்களில் ஏதாவது ஒரு வகையில் நாம் யாரிடமாவது கடனாளியாக இருக்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது. அதனால் தற்போதைய நாட்களில் ஒருவர் கடன் வாங்குவது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறான விஷயம் இல்லை. ஆனால் சிலர் கடன் வாங்கும் பொழுது எதற்காக கடன் வாங்குகிறோம், நமக்கு இப்போது கடன் வாங்குவது அவசியம் தானா என்பதை யோசிக்காமல் கடன் வாங்கி விடுவார்கள்.

-விளம்பரம்-

கூடுதல் வட்டிக்கு

அதாவது நாம் நமது வீட்டுக்கு தேவையான பொருட்களை இப்போது இந்த நவீன காலத்தில் இஎம்ஐ முறையில் கடனாக வாங்கி வருகிறோம். ஆனால் ஏதாவது பெரிய செலவுகள் வரும் போது சற்றும் கூட யோசிக்காமல் கூடுதல் வட்டிக்கு வெளியே கடன் வாங்கி விடுகிறார்கள். ஆனால் கடன் வாங்கிய பணத்தை சரியாக திருப்பி செலுத்தி விட்டோம் என்றால் பிரச்சனை வராது. ஆனால் செலுத்த முடியாமல் தவறும் போது வட்டிக்கு வட்டி என குட்டி போட்டு தொகை பெரியதாக மாறிவிடும். இப்படி கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கடன் இருந்தாலும் அதை எவ்வாறு சரி செய்வது என்பதை நான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

- Advertisement -

சுக்கிர பகவான்

நாம் பார்க்க போகிற ஆன்மீக ரீதியான விஷயத்தை நீங்கள் ஒரு பரிகாரமாகவே எடுத்துக் கொள்ளலாம். எவர் ஒருவர் கடன் வாங்கி துன்பம் பட்டு கடைசி வரை வட்டிக்கு மேல் வட்டி கட்டிக்கொண்டு வாழ்க்கையை தொலைப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஒருவரின் கிரக நிலையை பொறுத்துதான் இருக்கிறது. கிரகநிலை சரியாக இல்லாத போது இது போன்ற சூழ்நிலைகள் எல்லாம் ஏற்படும் மேலும் ஜாதகத்தில் சுக்கிரனின் பார்வை நம்மீது சரியாக விழாத பொழுதும். இது போன்ற துன்பத்தை நாம் மாட்டிக் கொள்வோம். அதனால் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளிலிருந்து நீங்கள் வெளிவர வேண்டும் என்றால் சுக்கிரனின் பார்வை உங்கள் மேல் விழ வேண்டும்.

பரிகாரம்

அந்த சுக்கிர பகவானின் பார்வை உங்கள் மேல் விழ வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி பாலாபிஷேகம் தொடர்ந்து செய்து வர வேண்டும். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் சுக்கிர பகவானின் பரிபூரண அருளும் உங்களுக்கு கிடைக்கும். அதனால் உங்கள் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவந்து யோகத்துடன் ஒரு நல்ல வாழ்க்கையை அவர் உங்களுக்கு கொடுப்பார். அதனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுக்கிர பகவானுக்கு பாலாபிஷேகமும் தொடர்ந்து தினசரி இரண்டு நெய் தீபமும் மறக்காமல் ஏற்றி வாருங்கள்.

துளசி பரிகாரம்

நாம் மேலே பார்த்த பரிகாரம் போன்ற நமக்கு இருக்கும் கடன் தொல்லையில் இருந்து மீண்டு வெளி வர வீட்டிலேயே இன்னொரு எளிய பரிகாரத்தையும் நாம் செய்யலாம். ஆனால் அந்த பரிகாரம் செய்வதற்கு நீங்கள் கட்டாயம் வீட்டில் துளசி செடி வைத்திருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு நம் வீட்டில் உள்ள துளசி செடிக்கு தினமும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தீபம் ஏற்றிய பின்பு துளசி செடியின் தண்டும் மண்ணும் இணை இடத்தில் இருக்கும் மண்ணை எடுத்து திலகமாக நெற்றியில் இட வேண்டும்.

-விளம்பரம்-

பண வரவு அதிகரிக்க

ஏன் தண்டும் மண்ணும் இணையு இடத்தில் உள்ள மண்ணை திலகமாக வைக்கின்றோம் தெரியுமா ? ஏனென்றால் அந்த இடத்தில் தான் மகாலட்சுமி தேவியும், மகாவிஷ்ணுவும் வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றனர். இந்த பரிகாரம் நாம் செய்வதன் மூலம் ஒரு மனிதனின் கடன் அடைய வேண்டுமென்றால் அவனுக்கு பண வரவு என்பது அதிகரிக்க வேண்டும் அந்த பணவரவை நமக்கு தாராளமாக அள்ளிக் கொடுப்பவர் தான் மகாலட்சுமி தேவி. அதிலும் மகாலட்சுமி தயாரும், விஷ்ணு பகவானும் சேர்ந்து இருக்கும் அந்த இடத்தை நாம் தினமும் தொட்டு வணங்கி வரும் போது நமக்கு இருக்கும் அனைத்து கடன் பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கான பணம் வரவு நம்மிடம் இருக்கும்.

நல்ல பலன் கிடைக்கும்

இந்த இரண்டு பரிகாரங்களும் மிகவும் எளிமையானது சக்தி வாய்ந்தது அதனால் இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்து விட்டு தானாகவே உங்கள் கடன் அடையும் என்று உட்கார்ந்து விடக்கூடாது. உங்கள் கடனை அடைப்பதற்கு உங்களால் முடிந்த முயற்சிகளையும் நீங்கள் தொடர்ந்து எடுக்கும் போது நீங்கள் செய்த இந்த பரிகாரத்தின் பலனும் உங்களுக்கு சேர்ந்து கிடைக்கும் அதன் மூலம் உங்களுக்கு எவ்வளவு இருந்தாலும் குறுகிய காலத்தில் வேகமாக கடனை அடைத்து நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழலாம் அதனால் நம்பிக்கையுடன் இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்து வாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.