வாங்கிய கடனை இப்படி திருப்பி கொடுக்கும் போது மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்!

- Advertisement -

கடன் வாங்குவது ஒன்றும் தவறான செயல் இல்லை இந்த பூமியில் வாழும் பெரும்பாலான மனிதர்களும் வாழ்நாளில் ஒரு முறையாவது அடுத்தவர்களிடம் கடன் வாங்கிய தான் ஆக வேண்டும் ஆனால் சில மனிதர்களுக்கு அவர்கள் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய கடன் சுமையை அவர்கள் சுமக்க வேண்டி இருக்கும். அவர்கள் நினைத்தாலும் உடனடியாக அந்த கடனை அடைக்க முடியாது அவ்வளவு பெரிய தொகையாக இருக்கும் இருந்தாலும் உங்களிடம் இருக்கும் கடன் பிரச்சினை தண்ணீர் போல் கரைந்து போனால் எப்படி இருக்கும். அதற்கு என்னசெய்ய வேண்டும் என்பதை நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கடன் பிரச்சனை தீர

• கடன் வாங்கியவர்கள் அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திரத்தில் கடன் வாங்கிய அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறைந்து விடும்

- Advertisement -

• நீங்கள் கடன் வாங்கியவர்களிடம் பணம் கொடுப்பது செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் கொடுப்பதால் மீதம் உள்ள கடன் பிரச்னைகள் தீரும்.

• முதலில் பார்த்தது போல் ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும், சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகை நேரத்தில் நீங்கள் வாங்கிய கடனின் அசல் தொகையில் ஒரு பகுதியை திருப்பி கொடுத்தால் கடன் சீக்கிரம் தீரும்.

• அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும் போது மற்றும் அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போது நீங்கள் யாரிடம் அதிகமாக கடன் வாங்கி உள்ளீர்களோ அவர்களிடம் வாங்கிய கடனின் அசலில் ஒரு சிறிய தொகையை கொடுத்தால் கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.

-விளம்பரம்-

• நீங்கள் வாங்கிய கடனை அடைப்பதாக இருந்தாலும் அல்லது தவனை தொகையை செலுத்துவதாக இருந்தாலும் குளிகை நேரம் மற்றும் கரி நாட்களில் கடன் அடைப்பது சிறந்ததாக இருக்கும்.

• நீங்கள் வாங்கிய கடனை மரணயோகம் உள்ள நாட்களில் திருப்பிக் கொடுக்கும் போதும் கடன் பிரச்சனையும் தீர்ந்து விடும், மீண்டும் கடன் பிரச்சனை வராமலும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here