திருப்பி கொடுக்கவே முடியாத கடனை கூட திருப்பி கொடுக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள் இந்தால் மடடும் போதும்!

- Advertisement -

இந்த உலகில் யார் தான் கடன் வாங்காமல் வாழ்கிறார்கள் அனைவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமக்கு ஒன்று தேவைப்படும்போது அதை மற்றவரிடம் இருந்து கடனாக வாங்கி பயன்படுத்துகிறார்கள். அது பொருளாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி. ஒருவர் கடன் வாங்கும் போது அவரின் கால நேரங்கள் அல்லது சூழ்நிலைகள் சரி இல்லாமல் போகும் போது. அவர்கள் வாங்கிய கடனுக்கு மேல் கடன் வாங்கி வாழ்க்கை முழுதும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு ஒரு கடன் சூழ்ந்த வாழ்க்கையை மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி திருப்பி கொடுக்கவே முடியாத கடனையும் திருப்பி கொடுக்க இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் என்ன செய்ய வேண்டும் என்பதனை நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

நேரம் காலம் பார்க்காமல் வாங்கிய கடன்

நாம் பொதுவாக கடன் வாங்கும் போது நமக்கு வேறு வழியில் ஏதாவது வர வேண்டிய பணத்தை நினைத்துக் கொண்டுதான் கடன் வாங்குவோம், பின் நமக்கு வர வேண்டிய பணம் வந்ததும் கடனை அடைத்து விடலாம் என்று நினைத்திருப்போம். ஆனால் நமக்கு வர வேண்டிய பணம் வராமல் போகும் போது அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். அதனால் தான் எப்பொழுதும் கடன் வாங்கும் போது நேரம் காலம் பார்த்து சரியாக வர வேண்டும். ஆனால் நமக்கு ஒரு அவசர தேவை என்று வரும்போது நேரம் காலம் எல்லாம் பார்த்துவிட்டு கடன் வாங்க முடியாது. அதனால் இது போல் நேரம் காலம் பார்க்காமல் நீங்கள் வாங்கிய கடனை எப்படி அடைக்க வேண்டும்.

- Advertisement -

கடன் அடைக்கும் பரிகாரம்

நீங்கள் எவ்வளவு காலமாக அடைக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த கடனை அடைப்பதற்கு இதை நீங்கள் செய்தால் மட்டும் போதும் இதை நீங்கள் ஒரு பரிகாரமாக கூட எடுத்துக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை நீங்கள் என்று செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ. அன்று காலை 7 மணிக்கு முன்பாகவே எழுந்து ஏழு மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும். அதற்கு காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பின்பு
ஒரு சிவப்பு நிற துணி எடுத்துக் கொண்டு அதில் 10 கருப்பு மிளகு, சிறிது கொட்டா பாக்கு மற்றும் சிறிது சில்லறை காசுகளை சேர்த்து ஒன்றாக சேர்த்து ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

வேறு நபர்கள் கைப்படக்கூடாது

பிறகு நீங்கள் முடிச்சாக முடிந்ததை ஒரு மண்பானையில் போட்டு அத்துடன் ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டு அதில் நீங்கள் கடன் யாரிடம் வாங்கினீர்களோ அவரின் பெயர் மற்றும் நீங்கள் கடன் வாங்கிய தொகை இரண்டையும் எழுதி அந்த பானையைில் போட்டு விடுங்கள். இந்த கடன் சீக்கிரமாக அடைய வேண்டும் என்று உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து, உங்கள் பிரார்த்தனையை மனம் உருக சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். இந்த மண்பானை உங்கள் வீட்டில் பூஜை அறையிலேயே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் ஆனால் எக்காரணம் வேண்டும் உங்கள் கை தவிர வேற யாரு கையும் இந்த மண்பானையில் படக்கூடாது.

தீப ஆராதனை காட்ட வேண்டும்

அதன் பின்பு தினசரி உங்கள் வீட்டின் பூஜை அறையில் நீங்கள் பூஜை செய்யும் போது இந்த மண்பானைக்கும் தீபாராதனை காட்டி நீங்கள் வாங்கிய கடன் வேகமாக அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் இந்த பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்து முடித்தவுடன் உங்கள் கடன் முழுவதும் அடைந்து விடும் என்று சும்மா இருந்துவிடக் கூடாது. நீங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்கு உங்களால் முடிந்த முயற்சிகளையும் நீங்கள் தொடர்ந்து எடுத்து வர வேண்டும் எப்படி நீங்கள் செய்யும் போது உங்கள் முயற்சியுடன் சேர்ந்து இந்த பரிகாரத்தின் பலனும் சேர்ந்து உங்கள் கடன் விரைவாக அடைந்துவிடும்.

-விளம்பரம்-

கடன் அடைந்தவுடன்

உங்கள் கடன் பிரச்சனை முழுவதுமாக அடைந்தவுடன் நீங்கள் மண்பானையைில் போட்டு வைத்திருக்கும் சிவப்பு துணியை முடிச்சை அவிழ்த்து அதில் இருக்கும் சில்லறை காசுகளை உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள். பின்பு அந்த முடிச்சில் மீதம் இருக்கும் கொட்டா பாக்கு, மிளகு, பேப்பர் மண்பானை அனைத்தையும் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஓடும் நீர் நிலையில் போட்டு விடுங்கள். முழு நம்பிக்கையுடன் இதை மட்டும் செய்து பாருங்கள் விரைவில் நீங்கள் அடைக்கவே முடியாது என்று நினைத்த கடன் கூட அடையும்.