கடன் வாங்கி வட்டி மேல் வட்டி கட்டி அவதிப்படுவார்கள் இதை மட்டும் செய்யுங்கள் கடன் தீரும்!

- Advertisement -

-விளம்பரம்-

இக்காலகட்டத்தில் கடன் என்ற சொல்லை கேளாதோர் யாரும் இல்லை ஏன் நம்மில் பலரும் கடன் என்ற பிடியில் சிக்கி தவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். என்னதான் இந்த கடனை அடைப்பதற்கு நாம் பாடுபட்டாலும் நம் நேரமோ காலமோ அதற்கு வழி விடுவதில்லை.

- Advertisement -

கடன் வாங்குவது தவறு என்றாலும் கூட, கடன் வாங்காமல் இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடிவதில்லை. இதற்குப் போதிய வருமானம் இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும், அநாவசியமான செலவுகள் ஒரு பக்கம் வந்து கொண்டே இருப்பதும் முக்கியமான காரணம். இது போன்ற நெருக்கடியான சமயங்களில் தவிர்க்க முடியாமல் கடன் வாங்கி அந்த கடன் பல மடங்கு பெருகி அவதிப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் கடன் அடையும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர்க்கும் பரிகாரம் :

கடன் அடைய நாம் செய்யும் இந்த பரிகாரத்தை இரண்டு வழிகளில் செய்ய வேண்டும். அதில் முதல் வழி என்னவென்று பார்ப்போம். இந்த பரிகாரத்தை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். திங்கட்கிழமையன்று சனி ஹேரையில் மதியம் 2 மணி முதல் 3 செய்ய வேண்டும். அதே போல் சனிக்கிழமையன்று சந்திர ஹோரையில் மதியம் 12 லிருந்து 1 மணிக்கு செய்ய வேண்டும்.

அதே போல் இந்த பரிகாரத்தை நீர் நிலைகளில் தான் செய்ய வேண்டும். ஓடை, கடல், ஏரி இப்படி ஆன இடங்களில் தான் செய்ய வேண்டும். நீர் நிலை இல்லாதவர்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களை குழாயிலிருந்து தண்ணீர் ஊற்றுவது போல் தண்ணீரை உங்கள் முன் நின்று ஊற்ற சொல்லி அதற்கு முன் நின்று நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஆனால் இந்த பரிகாரத்தை வீட்டிற்குள்ளே செய்யக் கூடாது.

-விளம்பரம்-

இந்த நேரத்தில் இரண்டு கைகளிலும் கல் உப்பை எடுத்துக் கொண்டு நீரின் முன்பாக நின்று உங்களுடைய கடன் சுமை எவ்வளவோ அதை சொல்லி விரைவில் அடைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும் இதை ஹோரைநேரத்தில் 15 நிமிடம் செய்த பிறகு இந்த உப்பை நீரில் உங்கள் இரண்டு கைகளால் அப்படியே கரைத்து விட வேண்டும். இதையை வீட்டில் செய்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் உப்பை கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இதை தொடர்ந்து செய்து வர உங்களுக்கு வருமானம் பல மடங்கு பெருகி கடன் சுமை இல்லாமல் போகக் கூடிய நிலை வரும்.

இந்த பரிகாரத்துடன் உங்கள் வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு மண்பானை நிறைய கல்லுப்பை வாங்கி வைத்து விடுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகர் பாதத்தில் வைத்து பூஜை செய்து கொண்டு வாருங்கள். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை நீங்கள் வைத்திருக்கும் கல் உப்பு பானையின் உள்ளே புதைத்து விட வேண்டும். இந்தப் பானை ஒரு மாதம் வரை அசையாமல் அந்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும்.

ஒரு மாதம் கழித்து இந்தப் பானையில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து சுத்தம் செய்து பூஜை அறையில் வைத்து விட்டு, இந்த பானையை உப்புடன் தண்ணீரில் கரைத்து விட வேண்டும். அதன் பிறகு மீண்டும் புதிதாக ஒரு பானை வாங்கி அதில் உப்பை நிறைத்து இந்த ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்து வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை முதலில் தொடங்கும் போது திங்கட்கிழமை ஆரம்பித்தால் ஒரு மாதம் கழித்து மறுபடியும் புதிய பானை மாற்றுவதும் திங்கட்கிழமை தான் மாற்ற வேண்டும்.

-விளம்பரம்-

எவ்வளவு பெரிய கடன் சுமை இருந்தாலும் அது படிப்படியாக குறைந்து உங்களுக்கு கடன் சுமையை இல்லாத அளவிற்கு வருமானம் பல மடங்கு பெருகி வீண் செலவுகள் தவிர்க்க, இந்த இரண்டு எளிய பரிகாரங்கள் நிச்சயம் உதவி செய்யும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து கடன் இல்லாத வாழ்வை வாழ முயலுங்கள்.