உங்கள் வீட்டில் சமையலுக்கு எந்த கல் உப்பா, தூள் உப்பா ? தூள் உப்பு என்றால் இனி அதை வாங்காதீர்கள்!

- Advertisement -

பொதுவாக நாம் உண்ண பயன்படுத்தும் ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் அன்னபூரணி வாசம் செய்கிறாள். ஆனால் இந்த உணவுப் பொருட்களுக்கு எல்லாம் சுவையை கொடுக்கும் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறால். ஏன் மகாலட்சுமி உப்பில் வாசம் செய்கிறாள் என்றால் மகாலட்சுமி தன் கணவர் விஷ்ணு பகவானுடன் பாற்கடலில் தான் வாசம் செய்கிறார். அதனால் கடலில் இருக்கும் உப்பு வழியாக மகாலட்சுமி அனைத்து இடங்களிலும் பிரதிபலிக்கிறார். அதனால் வீட்டில் தூள் உப்பு பயன்படுத்துவதற்கு பதில் கல் உப்பை பயன்படுத்தினால் அது ஆரோக்கியமாகவும் இருக்கும். இது வீட்டிற்கும் லட்சுமி கடாட்சத்தை சேர்க்கும். அதனால் நம் வீட்டில் சமையலுக்கு கல் உப்பை பயன்படுத்துவதால் நம் வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

உங்கள் வீட்டில் நீங்கள் சமையலுக்கு அவசியம் கல் உப்பை பயன்படுத்துங்கள். ஏனென்றால் கல்உப்பு வீட்டில் இருந்தால் குபேரர் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதற்கு சமம். நீங்கள் பயன்படுத்தும் கல் உப்பை கண்ணாடி பாட்டில் அல்லது மண்பாண்டங்களிலும் வைத்து புழங்குவது இன்னும் சிறப்பானதாக இருக்கும். முடிந்த அளவிற்கு உங்கள் வீட்டின் சமையலுக்கு கல் உப்பை பயன்படுத்த பாருங்கள் முடியாத பட்சத்தில் தூள் உப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் நீங்கள் சமையலுக்கு கல் உப்பை பயன்படுத்தும் பொழுது கரண்டிகளால் எடுத்து உபயோகப்படுத்தாமல் உங்கள் கைகளால் உப்பை உபயோகப்படுத்தினால் உங்கள் வீட்டில் உள்ள தரித்திரம் நீங்கி செல்வமகளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும் உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லையும் தீரும் மேலும் நீங்கள் வீட்டில் கல் உப்பு வாங்கும் பொழுது வெள்ளிக்கிழமை தினத்தில் வாங்குவது இன்னும் சிறப்பானது. வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை தினத்தன்று கல் உப்பின் வைத்திருக்கும் இடத்தின் அருகே விளக்கு ஏற்றி வைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினைகளாக இருந்தாலும் அது நொடி பொழுதில் காணாமல் போய்விடும் அந்த சக்தி கல் உப்பிற்கு உண்டு.

மேலும் ஒரு மஞ்சள் துணி அல்லது சிவப்பு மணி எடுத்துக்கொண்டு அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து அதனுடன் வெற்றிலைக்கு பயன்படுத்தும் கொட்ட பாக்கு இரண்டு வைத்து, சிறிது அரிசியும் சேர்த்து ஒரு முடிச்சாக முடிந்து கல் உப்பில் பட்பாவில் போட்டு வைத்தால் உங்களது வீட்டில் அல்ல அல்ல குறையாத செல்வம் கிடைக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் தானியம் பெருகும் நீங்கள் அந்த முடிச்சில் ஐந்து ரூபாய் நாணயத்திற்கு பதிலாக உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளி நாணயத்தை பயன்படுத்தினால் உங்களுக்கு சுக்கிர யோகம் தேடி வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here