இந்த அம்மனை மட்டும் வணங்கினால் போதும்! கஷ்டமே நெருங்காது!

- Advertisement -

ஒரு மனிதன் தான் பிறப்பு முதல் பிறக்கும் வரை வாழ்கின்ற வாழ்க்கை அனைத்தையும் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிப்பது கிரகங்கள் தான். ஒருவன் எப்போது சந்தோஷமாக இருக்க வேண்டும், எப்போது துக்கமாக இருக்க வேண்டும் என நேர காலத்திற்கு ஏற்றபடி செயல்படும் எல்லா கிரகங்களும் நமக்கு தீமை செய்து கொண்டே இருக்காது அதே போல் நன்மையை மட்டும் செய்து கொண்டேவும் இருக்காது. நீங்கள் உங்கள் வாழ்வில் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல் தான் இந்த கிரகங்கள் செயல்படும். இருந்தாலும் இந்த கிரகங்களின் தாக்கத்திலிருந்து வெளியே வர சக்தி வாய்ந்த பரிகாரம் உள்ளது. அதைப் பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில தெளிவாக காணலாம் பாருங்கள்.

-விளம்பரம்-

காளியம்மன்

இப்படி கர்ம வினைகளின் பலனாக கிரகத்தின் பிடியில் இருக்கும் மனிதர்களை பாதுகாக்க ஒரு தெய்வ சக்தி இருக்கிறது என்றால் அது காளி தேவிதான். கிரங்களின் பிடியிலிருந்து விடுபட விரும்பும் மனிதர்கள் காளி தேவியிடம் சரண் அடைந்து விட்டால் போதும். எப்பேர்ப்பட்ட கிரகங்களின் தாக்கமும், தோஷமாக இருந்தாலும் உங்களை நெருங்க கூட முடியாது. இப்படி இந்த கிரகங்களை தோஷங்கள் மற்றும் வினைகளில் இருந்த விடுபட்டு வெளியே வர காளி தேவியை எப்படி முறையாக வணங்க வேண்டும் பூஜை செய்ய வேண்டும் என்பதனை தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.

- Advertisement -

பரிகாரம் செய்ய தேவையானவை

நாம் இப்படி முறையாக காளி தேவி வணங்குவதற்கு நமக்கு தங்க அரளி பூ, மஞ்சள் நிற காட்டன் துணி, பன்னீர், மூன்று அகல் விளக்கு, வேப்ப எண்ணெய் போன்ற பொருள்கள் தேவைப்படும். இதில் தங்க அரளிப்பூ என்றவுடன் குழம்பி விட வேண்டாம் மஞ்சள் நிற அரளி பூவை தான் தங்க அரளிப்பூ என்று குறிப்பிடுவார்கள். இதில் நாம் வைத்திருக்கும் மஞ்சள் நிற காட்டன் துணியை வெந்நீரில் நனைத்து பின் நன்கு பிழிந்து கொள்ளுங்கள். பிழிந்த பிறகு சிறிது பன்னீர் கலந்த தண்ணீரில் முக்கி வெயிலில் துணியை காய வைத்து திரி போட பயன்படுத்த வேண்டும்.

பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதற்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான் அதனால் செவ்வாய்க்கிழமை தினம் என்று காளி கோவிலுக்கு சென்று அங்கு தங்க அரளி பூவை மாலையாக தொடுத்து எடுத்துச் செல்லுங்கள். அதை காளி தேவியாருக்கு போட கொடுத்து விட்டு. நாம் வைத்திருக்கும் அகல் விளக்கி எடுத்து, மஞ்சள் நிற திரி போட்டு, வேப்ப எண்ணெய்யை ஊற்றி திரி போட்டு விடுங்கள். இப்படி நாம் போடும் விளக்கின் முகங்கள் ஒன்றுக்கு ஒன்று பார்த்தவாறு இருக்குமாறு வைக்க வேண்டும்.

18 வாரங்கள்

இது போன்ற நீங்கள் 18 வாரங்கள் தொடர்ந்து காளி கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்து வரும் போது உங்களுக்கு இருக்கும் எப்பேர்ப்பட்ட கிரகங்களின் தோஷம் மற்றும் வினைகளாக இருந்தாலும் உங்களை விட்டு விலகிவிடும். பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது மாதவிடாய் காலங்கள் வந்தால் அதை கணக்கில் வைத்துக் கொள்ளாமல் விட்ட நாட்களில் மீண்டும் தொடர்ந்து செய்யலாம் நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்ல பலனை தருவாள் காளி தேவி.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here