வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி கோடீஸ்வர யோகம் தர இந்த இரண்டு பொருள் கையில் இருந்தால் போதும்!

- Advertisement -

எல்லோருக்குமே தான் செல்வந்தர் ஆக வேண்டும், கோடீஸ்வரனாக வாழ வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கனவு எல்லோருக்குமே இருக்கும். கோடீஸ்வர யோகம் ஜாதகத்தில் இருந்தாலும் நாம் அதற்காக செய்யும் முயற்சிதான் நம்மை முன்னோக்கி நகர்த்தும். செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமி, குபேரர், சுக்கிரன் ஆகியோரை குறிப்பிடுகிறோம். இவர்களின் அருள் இருந்தாலே பணம், செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

-விளம்பரம்-

பிறக்கும் போது ஏழையாக பிறந்தாலும் மரணிக்கும் போது கோடீஸ்வரராக மரணிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். அதனால் தான் “பணம் பத்தும் செய்யும் ” என்று கூறி வைத்தார்கள். தற்போது பணம் சம்பாதிப்பது மனிதர்களின் வாழ்நாள் லட்சியம், குறிக்கோளாக மாறிவிட்டது. மனிதர்கள் கோடீஸ்வர யோகத்தை விரும்பினாலும் அந்த யோகம் எளிதில் அனைவருக்கும் கிட்டுவதில்லை. பணம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க, வெள்ளிக்கிழமையில் இந்த ஒரே ஒரு பரிகாரத்தை செய்த வந்தாலே போதும்.

- Advertisement -

நேர்மறை ஆற்றல் அதிகரிக்க

கோடீஸ்வர யோகம் அமை வேண்டும் என்றால் அதற்கு சுக்கிரனின் அருட்பார்வை, மகாலட்சுமியின் அருட் கடாட்சம் எப்போதும் நம்முடைய வீட்டில் இருந்த கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மகாலட்சுமியின் அருள் கிடைக்க வீட்டைச் சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருக்க வேண்டும். அதற்கு கல் உப்பு, நாணயம் வைத்து பரிகாரம் செய்தாலே போதும். கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. பாற்கடலில் இருந்துதான் மகாலட்சுமி தோன்றினார். எனவே வெள்ளிக்கிழமை கல் உப்பு வைத்து பரிகாரம் செய்தால் மகாலட்சுமி தாயாரின் அருள் மட்டுமின்றி நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கலாம்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு ரூபாய் நாணயம் மற்றும் ஒரு கண்ணாடி பவுல் நிறைய கல் உப்பு நிரப்பி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை உப்பின் மேல் நிற்கும்படி வைத்து விடுங்கள். இதனுடன் ஒரு ஏலக்காய் மற்றும் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தையும் சேர்த்து வைத்து விடுங்கள். அதன்பிறகு இதனை‌ எடுத்து உங்கள் வீட்டின் பூஜையறையில் வைத்து விடுங்கள்.

இந்த கண்ணாடி பவுலுக்கு பக்கத்தில் ஒரு தீபம் ஒன்றை ஏற்றி வைத்து விடுங்கள். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து பணம் சேர வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் செய்து வாருங்கள். இதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை தனியாக எடுத்து வைத்துவிட்டு கல் உப்பை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : ஒன்பது வாரம் தொடர்ந்து முருகரை இப்படி வனங்கினால் வேகமாக சொந்த வீடு கட்டுவீங்க!

பணத்தை எப்போது உதாசீனமாகவோ, அலட்சியமான போக்குடனோ கையாளக் கூடாது. ஒரு ரூபாய் நாணயமாக இருந்தாலும் சரி அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை தோறும் செய்து வந்தால் மகாலட்சுமி அருள் வீட்டில் நிரந்தரமாக நிலைத்திருக்கும். அதுமட்டுமல்லாமல் பணப்புழக்கம் அதிகரிக்கும்.