ஒன்பது வாரம் தொடர்ந்து முருகரை இப்படி வனங்கினால் வேகமாக சொந்த வீடு கட்டுவீங்க!

- Advertisement -

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். அப்படி உள்ள பல ஆசைகளில் ஒன்று தான் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும். எவ்வளவு தான் சொத்து, பணம் இருந்தாலும் நமக்கென்று ஒரு வீடு இல்லை என்றால் அது மனக்குறையாகவே இருக்கும். சொந்த வீடு வாங்க முடியவில்லையே என்பது பலரின் ஏக்கமாகவும் கனவாகவும் இருந்து வருகிறது. சொந்த வீடு வாங்க வேண்டும், வாங்கிய இடத்தில் விரைவில் வீடு கட்ட வேண்டும், ஏற்கனவே துவங்கி பணப்பற்றாக்குறையால் கட்டிய வீட்டின் பணிகளை முடிக்க முடியாதமால் கவலையில் இருப்பவர்கள் ஏராளம்.

-விளம்பரம்-

புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும், சொந்த வீடு இருப்பவர்கள் இன்னொரு வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தாலும் இந்த பரிகாரம் செய்தால் கை மேல் பலன் கிடைத்துள்ளதாக வீடு கட்டியவர்கள் அனுபவப்பூர்வமாக கூறியுள்ளனர். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை விரதம்

செவ்வாய்க்கிழமை ஒரு புனிதமான கிழமையாகும். பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பது இந்தக்கிழமையைத்தான். காரணம் இந்தக் கிழமை முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாகும். மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய். வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.

முருகன் வழிபாடு

சொந்த வீடு அமைவதற்கு பரிகாரம் என்ன என்றெல்லாம் கேட்பார்கள் பலரும். அதற்கு முருகப்பெருமானை தொடர்ந்து வணங்க வேண்டும். ஆழ்ந்த பக்தியுடன் முருகக் கடவுளை தொடர்ந்து வணங்கி வரவேண்டும். நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு பூமிகாரகன் என்று பெயர். செவ்வாயினுடைய அதிதேவதை முருகன். யாருக்கெல்லாம் சொந்த வீடு மனை வேண்டும் என்று ஆசையும் கனவும் இருக்கிறதோ, அவர்கள் முருகக் கடவுளை வழிபடுவதன் மூலம் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும் என்கிறார்கள் நம் முன்னோர்கள்.

வீடு வாங்க முருகனை எவ்வாறு வழிபடலாம்

செவ்வாய் அருள் பெற முருகன் அருள் முக்கியம். முருகப் பெருமானின் சில தலங்கள் மண், மனை யோகம் தரும் திருத்தலங்களாக உள்ளன. சொந்த மனை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முருக்த் தளங்களில் ஒன்றான சிறுவாபுரியில் அமைந்துள்ள முருகப் பெருமானை செவ்வாய் அன்று சென்று தரிசனம் செய்து விளக்கேற்றி வரலாம். இத்தல முருகன், சொந்த வீடு மற்றும் திருமண யோகம் தரக்கூடிய தெய்வமாக விளங்குகிறார். அப்படி செய்யும் பொழுது நீங்களும் புதுமனை வாங்குவதற்கான யோகத்தை பெறுவீர்கள்.

-விளம்பரம்-

சிறுவாபுரி செல்ல‌ முடியாதவர்கள், உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று உங்கள் வசதிக்கேற்ப பூ வாங்கி கொடுப்பது அல்லது தீபம் ஏற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது , அர்ச்சனை செய்வது உங்கள் விருப்பப்படி ஏதேனும் ஒன்றரை செய்து முருகனிடம், என்னுடைய கனவு நினைவாக வேண்டும் அதாவது நான் சொந்த வீடு வாங்க வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து 9 வாரங்கள் இதனை செய்து வர வேண்டும். ஆனால் ஒன்பது வாரம் தவறவிடாமல் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

இதனையும் படியுங்கள் : பணம் பல வழிகளில் உங்களுக்கு வந்து கொண்டே இருக்க வேண்டுமா! இந்த ஒரே ஒரு தீபம் போதும்!

இந்த முருகர் வழிபாட்டை செவ்வாய் கிழமை காலையில் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் முழு மனதோடு செய்வதன் மூலம் பல நாட்களாக வீடு நிலம் வாங்க நினைத்துக் கொண்டிருப்பவர்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

-விளம்பரம்-