உங்கள் வாழ்வில் அதிசயம் நடக்க காமாட்சி அம்மன் விளக்கில் இந்த 1 பொருளை போட்டு மட்டும் தீபம்‌ ஏற்றுங்கள்!

- Advertisement -

நம்மில் பல பேரது வீட்டில் கண்டிப்பாக காமாட்சியம்மன் விளக்கு இருக்கும். தினந்தோறும் காலையும், மாலையும் அந்த விளக்கில் தீபத்தை ஏற்றி வழிபடுவதை வழக்கமாக வைத்து இருப்போம். இதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இப்படி நம்முடைய வீட்டின் நன்மைக்காக ஏற்றப்படும் இந்த விளக்கை எந்த ஒரு குறையும் இல்லாமல் நாம் ஏற்றுவது தானே உத்தமம்.

-விளம்பரம்-

இந்த உலகமானது செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தவத்தை மேற்கொண்ட அம்மன் காமாட்சி அம்மன் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தவத்தை காமாட்சியம்மன் மேற்கொண்ட சமயத்தில், மற்ற தெய்வங்கள் எல்லாம் காமாட்சி அம்மனிடம் வந்து சேர்ந்து ஐக்கியமாகி தவத்தை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து தெய்வங்களின் ஆசியைப் பெற வேண்டும் என்றால் வீட்டில் தினம்தோறும் காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

விளக்கு ஏற்றும் முறை

பொதுவாகவே காமாட்சியம்மன் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு, அதன் பின்பு திரி போட்டு தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்தால் நம் வீட்டில் சுப காரிய தடை நீங்கும். சொத்து வாங்கும் யோகம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக சொந்த வீட்டை கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள், ஐந்து ரூபாய் நாணயத்தை இப்படியாக காமாட்சி அம்மன் விளக்கில் போட்டு ஏற்றுவார்கள்.

சில பேர் ஒரு ரூபாய் நாணயத்தையும் காமாட்சி அம்மன் விளக்கில் போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவார்கள். இந்த ஐந்து ரூபாய் நாணயத்தில் தங்க நிறத்தில் இருக்கக்கூடிய நாணயம் கிடைத்தால் மிகவும் சிறப்பானது. உங்கள் வீட்டில் தீபம் ஏற்றும் காமாட்சி அம்மன் விளக்கில் தங்க நிறத்தில் இருக்கும் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு தீபம் ஏற்றலாம்.சில பேர் ஒரு ரூபாய் நாணயத்தையும் காமாட்சி அம்மன் விளக்கில் போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவார்கள். இந்த ஐந்து ரூபாய் நாணயத்தில் தங்க நிறத்தில் இருக்கக்கூடிய நாணயம் கிடைத்தால் மிகவும் சிறப்பானது. உங்கள் வீட்டில் தீபம் ஏற்றும் காமாட்சி அம்மன் விளக்கில் தங்க நிறத்தில் இருக்கும் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு தீபம் ஏற்றலாம்.

விளக்கில் இதை போடுங்கள்

இந்த ஐந்து ரூபாய் நாணயம் ஒரு ரூபாய் நாணயத்திற்கு பதிலாக, சிறிய அளவில் ஒரு கிராமுக்கும் குறைவாகவே தங்கத்தினால் செய்யப்பட்ட மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் கிடைக்கின்றன. இந்த தங்க நாணயத்தை வாங்கி நம் வீட்டு காமாட்சி அம்மன் தீபத்தில் போட்டு, நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றுவதால் நம் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கி, நம்முடைய வாழ்க்கை காலப்போக்கில் தங்கம் போல மின்ன தொடங்கிவிடும்.

-விளம்பரம்-

தங்க நாணயத்தை போடும்போது நல்லெண்ணெய் ஊற்றி தீப வழிபாடு செய்வதை விட, நெய் ஊற்றி தீப வழிபாடு செய்வது சிறப்பு. தினம் தோறும் இதை செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது தங்க நாணயத்தில் நெய் ஊற்றி, காமாட்சி அம்மன் தீபம் அல்லது கஜலட்சுமி விளக்கு தீபமேற்ற வேண்டும்.