உங்களுக்கு வறுமை, பண கஷ்டம் தரும் கண் திருஷ்டியே ஒரே அடியாக போக்க சிறிது மிளகு இருந்தால் போதும்!

- Advertisement -

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பைதான் அவ்வாறு பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கண் திருஷ்டி தாக்கினால் ஒருவருக்கு வறுமை, நோய் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி துன்பங்கள் வரும். ஒருவர் நன்றாக வாழ்ந்தாலே அவரைப்பார்த்து வயிறு எரிவார்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் நல்லவர்களைக்கூட கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.

-விளம்பரம்-

நோய் நொடிகள் வந்து பாடாய் படுத்தும். எனவே கண் திருஷ்டி நீங்க சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். ஏன் இப்படி என்று யோசித்தாலோ அல்லது கோவிலுக்கு சென்று பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டாலோ கண் திருஷ்டியின் தாக்குதல் அதிகம் பாதித்து இருப்பதாக சொல்லி அதற்கேற்ப பரிகாரமும் சொல்வார்கள். கண் திருஷ்டி போக சில பரிகாரங்களையும் சொல்வார்கள். அதில் ஒன்றனை இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

திருஷ்டி சுற்றி கழிப்பது ஏன்?

பொதுவாக கல் உப்பு, வர மிளகாய் சேர்த்து வைத்து திருஷ்டி கழித்து வீட்டு தெருவில் முச்சந்தியில் சுற்றிப்போடுவார்கள். வீட்டு வாசலில் கற்பூரம் ஏற்றி வைப்பார்கள். இது பொதுவாக திருஷ்டி கழிக்கும் முறையாகும். கல் உப்பு, வர மிளகாய்க்கு திருஷ்டியை போக்கும் சக்தி உள்ளது.

மிளகு பரிகாரம்

உங்களுடைய உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த புகழினால் கூடத் திருஷ்டி உண்டாகும். பரபரப்பாகச் செயல்பட்ட நீங்கள் சட்டென மந்தமாகச் செயல்பட நேரிடும். திடீர் மந்தம் இந்தத் திருஷ்டியினால் தான் ஏற்படும். இதற்குப் பரிகாரம் மிளகு சுற்றிப்போடுவது தான். உங்கள் கையில் 5 மிளகை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை தெரு முச்சந்தி அல்லது வீட்டு மாடியில் நின்று செய்யுங்கள். கிழக்கு நோக்கி நின்று கொள்ளுங்கள், நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மிளகை தலையை சுற்றி இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என ஏழு முறை சுற்றி தலையில் இருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி நான்கு மிளகை நான்கு திசையில் எறிந்து விடுங்கள். ஐந்தாவது மிளகை மேல் நோக்கி எறிந்து விடுங்கள்.

பரிகாரம் செய்யும் நேரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்நாளும் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் செய்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். இந்த பரிகாரத்தை மாலை 6.30 மணிக்கு மேல் தான் தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் கண் திருஷ்டி போக இந்த பரிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பரிகாரத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இதனை நீங்களும் செய்து பலன்‌ அடைந்து கொள்ளுங்கள்.

-விளம்பரம்-