உங்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் தீர அம்பாளை வேண்டி இதை செய்யுங்கள்!

- Advertisement -

நம்மல் பலரும் ஏன் நமக்கு மட்டும் கடவுள் எவ்வளவு கஷ்டங்களை தருகிறார் நாம் என்ன செய்தோம் ஏன் நாம் மட்டும் வாழ்வில் இவ்வளவு கஷ்டங்கள் எதிர்கொள்கிறோம் என்று சில நேரங்களில் சிந்தித்துப் பார்த்திருப்பீர்கள். ஆனால் உங்களுடைய வாழ்வில் நீங்கள் எவ்வளவு கஷ்டங்களை தாங்குவீர்கள் என்று அந்த இறைவனுக்கு நன்றாகவே தெரியும் அதனால் உங்களுக்கு கஷ்டங்களை கொடுக்கும் இறைவன் உங்களுடன் இருந்து நீங்கள் அந்த கஷ்டத்தை எப்படி எதிர்த்து போராடுகிறீர்கள் என்று பார்ப்பான். அதனால் நீங்கள் இறைவன் உங்களுடன் தான் இருக்கிறான் என்று துணிந்து அந்த கஷ்டத்தை எதிர்த்து போராட வேண்டும். என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் சில சமயம் அதிகப்படியான கஷ்டங்களை நாம் சுமக்க வேண்டிய சூழ்நிலை வரலாம் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

காலையில் நீங்கள் எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு முதலில் பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்துவிட்டு அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்க வீட்டிலையே அமர்ந்து உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டி அம்மன் உங்கள் கூட இருப்பதாக நினைத்துக் கொண்டு ” ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் லலிதா அம்பிகையை நமஹ” என்ற மந்திரத்தை ஒரு நாளைக்கு 1008 முறை கூறி லலிதாம்பிகையே வேண்டினாலே போதும்.

- Advertisement -

எவ்வளவு பெரிய கஷ்டங்களாக இருந்தாலும் மூன்றே மாதங்களில் உங்களை விட்டு போகிவிடும். உங்கள் வீட்டில் அடிக்கடி கணவன் மனைவி பிரச்சினை வந்தாலும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும், பல நாட்களாக சுப காரியங்கள் தடைப்பட்டு வந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்லதாக நடக்கும், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும், கடன் பிரச்சினை உள்ளவர்களுக்கு கடன் பிரச்சினை தீர்ந்து செல்வ செழிப்போடு வாழ்வீர்கள்.

இப்படி நீங்கள் தினந்தோறும் இந்த மந்திரத்தை உச்சரித்து வருவதன் மூலம் பிறவி கடன் என்று சொல்லப்படும் கடன் முதல் நீங்கள் இப்போது வாங்கி வைத்திருக்கும் கடன் வரை அனேத்தையும் தீர்க்கும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு அதனால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சும்மா இருக்கும் பொழுது கூட மனதிற்குள் இருந்தோம் பந்திரத்தை சொல்லிக்கொண்டு இருந்தால் போதும் நீங்கள் எவ்வளவு முறை இந்த மந்திரத்தை சொல்கிறீர்களோ அவ்வளவு வேகமாக உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து நீங்கள் செலவு செழிப்போடு வாழ்வதற்கு அந்த அம்பாள் ஆசீர்வதிப்பாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here