நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இதை கலந்து குளித்தால் உங்களை கெட்ட சக்தி நெருங்காது!

- Advertisement -

பொதுவாக நம் வீட்டிற்குள்ளும், வீட்டையும் எந்தவித கெட்ட சக்திகளும், கண் திருஷ்டிகளும் நெருங்காமல் இருப்பதற்காக நிலை வாசலில் கற்றாழையை தொங்கவிடுவது, காய்ந்த மிளகாயை கட்டி தொங்கவிடுவது போன்ற வேலைகளை நாம் செய்வோம். இருந்தாலும் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க முடியாது அல்லவா வெளியே செல்லும் நம்மை நெருங்கும் கெட்ட சக்திகள் இடம் இருந்தும் கண் திருஷ்டிகளில் இருந்தும் நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். அதனால் நம்மை பாதுகாப்பதற்காக தினமும் ஒரு பூஜை வழிபாடு செய்து கொண்டே இருக்க முடியாது வெளியே செல்லும் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

நம்முடைய புராணங்கள், சஸ்திரங்கள் கூறுவதன் படி இயற்கையாகவே சில பொருட்களில் கடவுளின் சக்தி அதிகமாக நிறைந்து காணப்படும். உதாரணமாக பசும்பால், துளசி, மருதாணி இலை, வேப்ப இலை , மஞ்சள் தூள், அருகம்புல் இந்த பொருட்கள் எல்லாம் ஒவ்வொரு கடவுளுக்கு விருப்பமான பொருள்கள். ஆதனால் நீங்கள் குளிப்பதற்கு முன் ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் இந்த பொருள்களில் ஏதாவது ஒரு பொருளை கலந்து கொள்ளுங்கள். அதாவது பசும்பால் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்றால் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பாசும் பாலை கலந்து கொள்ளலாம். இலை வகைகளை கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்றால் ஒரு கை அளவு இலைகளை சேர்த்து கலந்து கொண்டு ஒரு பத்து நிமிடங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அன்பின் பத்து நிமிடம் கழித்து இந்த கடவுளின் சக்தி நிறைந்த பொருட்கள் கலந்த அந்த தண்ணீரில் நாம் குளித்து வருவதன் மூலம். நம் மேல் இருக்கும் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல், சோம்பேறித்தனம் உடல் வலி என அனைத்தும் நம்மை விட்டு வெளியேறிவிடும் ஏன் நமக்கே தெரியாமல் நம் உடம்பில் இருக்கும் கெட்ட சக்திகளும் இதனால் நம்மை விட்டு விலகிச் செல்லும்.

நீங்கள் 48 நாட்கள் தொடர்ந்து. இது போன்று ஒரு பொருளை குளிக்கும் தண்ணீரில் கலந்து நீங்கள் குளித்து வந்தால் உங்களுடைய முகத்தில் ஒரு ஒளி தெரியும். அதாவது கலை இல்லாமல் இருந்த உங்கள் முகத்தில் நல்ல கலை வரும் லட்சுமி கடாட்சமாக நீங்கள் உணர்வீர்கள். இனி நீங்கள் வெளியே செல்லும் பொழுது எந்தவித கண் திருஷ்டியும், கெட்ட சக்தியும் உங்களை நெருங்க முடியாது. மேலும் வயதுக்கு வந்த பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இதுபோன்று இந்த தண்ணீரில் குளித்து வந்தால் அது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here