கழுத்தை நெரிக்கும் அளவிற்கு இருக்கும் கடனில் இருந்து கூட மீள! இந்த 1 பொருளை விளக்கில் போட்டு தீபம் ஏற்றுங்கள்!

- Advertisement -

கடன் வாங்குவது என்பது அவ்வளவு பெரிய குற்றம் ஒன்றுமில்லை இந்த உலகத்தில் நம் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்தில் கடன் வாங்கி தான் நமது வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருக்கும். நம்மிடம் பணம் திரும்ப வந்தவுடன் அந்த கடனை அடைத்து விடுவோம். அதேபோலத்தான் சிலர் கடன் வாங்குவார்கள் ஆனால் அவர்கள் கடன் வாங்கிய நேரமா என்னன்னு தெரியாது அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கடன் மேல் கடன் வாங்கி மீள முடியாத கடனில் மாட்டிக் கொள்வார்கள். இந்த கடனை அடைத்து முடித்து திரும்புவதற்குள் அவர்களது வாழ்க்கையில் பாதி காலம் போயிருக்கும். அதனால் கழுத்தை நெறித்து பிடிக்கும் அளவிற்கு கடன் இருந்தாலும் அதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

ஆண்கள் ஒரு விளக்கு ஏற்றினால் போதும்

இப்படி உங்களுக்கு எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் ஒரு சிறிய விளக்கை ஏற்றினாலே போதும் ஆம் இந்த விளக்கை ஏற்றும் போது உங்களுக்கான வருமானம் அதிகரித்து நீங்கள். நீங்கள் செலவுக்காக கடன் வாங்கும் நிலை ஏற்படாது அதேபோல் நீங்கள் இதற்கு முன்னாடி வாங்கிய கடனை அடைப்பதற்கான அளவுக்கு வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும். ஏதாவது ஒரு வழியில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் அது என்ன விளக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

- Advertisement -

தேவையானவை

உங்களுக்கு இருக்கும் எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு இந்த பரிகாரம் செய்ய உங்களுக்கு கடுகு எண்ணெய், பஞ்சு திரி, விளக்கு இது போன்ற பொருட்கள் தேவைப்படும் இந்த பொருட்களை எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள். அது எந்த கோயிலாக இருந்தாலும் சரி பிள்ளையார் கோவில், அம்மன் கோவில், சிவன் கோவில் பெருமாள் கோவில் இது போன்ற எந்த கோவில் இருந்தாலும் அங்கு செல்லலாம் அந்த கோவிலில் விளக்கு ஏற்றதற்காக இருக்கும் இடத்தில் அகல் விளக்கை வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

கிராம்பு

அப்படி எங்கள் திரி போட்டு தீபம் ஏற்றும்போது அந்த விளக்கில் ஒரு முக்கியமான பொருள் ஒன்று சேர்க்க வேண்டும் அதுதான் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் அனைத்தையும் தீர்க்க போகிறது. ஆம் நீங்கள் அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு விளக்கு ஏற்றுவதற்கு முன்பு அதில் மொட்டுடன் இருக்கக்கூடிய கிராம்பு ஒன்றை போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். அதன் பின் கோவிலிலேயே ஒரு இடத்தில் அமர்ந்து ஒரு ஐந்து நிமிடம் மனதார கடவுளை நினைத்து எனக்கு இருக்கும் கடன் சுமையை குறைப்பதற்கு ஏற்றார் போல் நல்ல வருமானத்தை தர வேண்டும் என்று மனம் உருகி வேண்டி கொண்டு தியானம் செய்யுங்கள்.

48 நாட்கள்

கடவுளிடம் அமர்ந்து மனம் வருகி வேண்டிக் கொண்ட பின் நீங்கள் உங்கள் வேலையை பார்க்க செல்லலாம். இப்படி ஆண்கள் 48 நாட்கள் இந்த விளக்கை தொடர்ந்து ஏற்றிக் கொண்டு வந்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் சுமை தீரும் அளவிற்கு வருமானம் அதிகரிக்கும் என சாஸ்திரங்களும் வேதங்களும் கூறுகின்றனர். தினமும் 48 நாட்கள் கோவில் சென்று இந்த விளக்கை இப்படி ஏற்ற முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் வைத்து இந்த விளக்கை ஏற்றி வரலாம் ஆனால் கோவில் சென்று இந்த விளக்கை ஏற்றுவது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

-விளம்பரம்-

பல வழிகளில் பணம் வரும்

இந்த எளிமையான விளக்கு பரிகாரத்தை மட்டும் ஆண்கள் தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் மட்டும் போதும் உங்களுக்கு இருக்கும் எவ்வளவு பெரிய கடன் சுமையாக இருந்தாலும் சரி சிறுது, சிறிதாக குறைய தொடங்கும். அதற்கேற்றார் போல் உங்களின் வருமானம் பல வழிகளில் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும் மேலும் இந்த பரிகாரம் செய்ய ஆரம்பித்த நாட்களில் இருந்து நீங்கள் வாங்கும் கடனை குறைத்துக் கொள்ள தொடங்குங்கள் இந்த பரிகாரம் உங்களுக்கு உதவுவதற்கு இன்னும் சிறப்பானதாக இருக்கும். அதனால் நம்பிக்கையோடு ஆண்கள் அந்த பரிகாரத்தை செய்து வாருங்கள் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here