தீரா கடனும் தீர்ந்து போக இந்த தண்ணீரை மட்டும் உங்கள் வீட்டில் தெளித்துக் கொண்டே இருங்கள் !

- Advertisement -

கடன் இல்லாத வாழ்வை தான் நம்மில் பலரும் வாழ விரும்புகிறோம். ஆனால் நாம் அந்த கடனை விட்டாலும், கடன் நம்மை விடுவதில்லை. ஏதோ ஒரு வகையில் எப்படியோ நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். என்னதான் சீட்டு போட்டு கடனை அடைக்க நாம் முயன்றாலும் நம்மால் முடிவதில்லை. வாங்கிய ஒரு லட்ச ரூபாய் கடனுக்காக வட்டி மட்டுமே நாம் ஒரு லட்ச ரூபாய் கட்டுவோம் ஆனால் அசல் தொகையை நம்மால் திருப்பி தர இயலாது. பேராசைப்பட்டு செலவு செய்வதை தடுக்க, அதை சுட்டிக்காட்ட இந்த பழமொழியை பெரியவர்கள் சொல்லுவார்கள்.

-விளம்பரம்-

திருமணம், காதுகுத்து போன்ற விசேஷ காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டுமா

கடன் வாங்கி நாம் எந்த செயலையும் செய்யக்கூடாது. நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து தான் நம் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்தது இதுதான் என்று நினைத்தாலே நம் வாழ்க்கையை கடன் இல்லாமல் நாம் வாழலாம். யாரிடமும் நாம் கைநீட்டி கடன் பெறுவதை அறவே நாம் தவிர்க்க வேண்டும். ஆனால் அவசர காலம் என்று வரும் பொழுது அதாவது மருந்து செலவுக்கு, அல்லது உயிர் போகும் நிலை என்றாலோ நாம் கடன் பெற்றுக்கொள்ளலாம் அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நம்மில் பலரும் திருமணம் செய்வதற்கு, வீடு கட்டுவதற்கு என ஒவ்வொரு காரணத்திற்காக கடன் வாங்குகிறார்கள்.

- Advertisement -

என்னதான் ஒரு காரணம் சொன்னாலும், கடன் வாங்கி கல்யாணம் செய்வதும் தவறுதான். கடன் வாங்கி வீடு கட்டுவதும் தவறுதான். இருந்தாலும் இன்றைய சூழ்நிலை லோன் என்ற ஒன்று நம்மை வளைத்து கட்டிப்போட்டு இருக்கின்றது.லோன் வாங்கி நம் செலவு செய்தாலும் அதுவும் கடன் தான். அதெல்லாம் இருக்கட்டும் நம்முடைய கடன் பிரச்சினை விரட்டி அடிக்க, வறுமையை சரி செய்ய என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றி பதிவில் பார்க்கலாம்.

கடன் தீர செலவில்லாத பரிகாரம்

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடு முழுவதையும் சுத்தம் செய்து, பின்னர் கோமியம் எடுத்து வந்து அதில் மஞ்சள் தூள் கலந்து நம் வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். பக்கத்தில் மாடு வளர்ப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் சொல்லி கோமியத்தை நாம் வாங்க வேண்டும். இந்த கோமியத்தை வாங்கி வந்து பூஜை அறை முதல் சமையலறை வரை ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தெளிக்க வேண்டும்.

தரித்திரம் விலகும்

ஒரு வெற்றிலை, மா இலையை வைத்து இந்த கோமியத்தை தெளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வீட்டில் விளக்கு ஏற்றி மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு இந்த கோமியத்தை தெளித்து வந்தால் வீட்டை பிடித்த தரித்திரம் தானாக விலகும்.

-விளம்பரம்-

உங்கள் வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனை எல்லாம் படிப்படியாக குறைவதற்கு இந்த எளிமையான பரிகாரம் ஒன்றே போதும். உங்க வீட்டு பக்கத்தில் மாடு இல்லை என்றால் கோமியத்தை காசு கொடுத்து கடையில் தான் வாங்க வேண்டும். வேறு வழியே கிடையாது. எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.