உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டுமா! விளக்கு ஏற்றுவதற்கு முன் இதை செய்யுங்கள்!

- Advertisement -

இந்த உலகில் வாழும் அனைவருக்கும் சில ஆசைகள் இருந்து கொண்டே இருக்கும் ஆனால் அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கு நம்மிடம் போதுமான அளவிற்கு பணம் தான் இருக்காது பணம் இருந்தாலும் எவ்வளவு ஆசைகளை தான் நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆசைகளுக்கு ஒரு எல்லையே கிடையாது இருந்தாலும் நீங்கள் சாதாரணமாக செலவு செய்யும் போதும் எடுக்க எடுக்க உங்கள் செல்வம் குறையாமல் மென்மேலும் சேர்ந்து கொண்டே இருப்பதற்கு ஆன்மீகத்தில் ஒரு வழி இருக்கிறது. ஆம் நீங்கள் தினசரி வீடுகளில் சாமி கும்பிடுபவராக இருந்தாலும், சரி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் சாமி கும்பிடுவராக இருந்தாலும் சரி விளக்கேற்றுவதற்கு முன் இந்த விஷயத்தை செய்தால் உங்களின் செல்வம் எடுக்க எடுக்க குறையாமல் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.

-விளம்பரம்-

ஒம் ஸ்ரீம் அக்ஷயம்

உங்களுக்கு பூஜை செய்வதற்கு ஏற்ற நேரத்தை முடிவு செய்து கொண்டு பூஜை அறையை சுத்தப்படுத்தி தயார் செய்துவிட்டு. நீங்களும் குளித்துவிட்டு அல்லது கை கால்களை கழுவி விட்டு பெண்கள் முகத்தில் குங்குமம் இட்டு மங்களகரமாக பூஜை அறையில் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு விளக்கு ஏற்றுவதற்கு தயாராக செய்து கொள்ளுங்கள். பின்பு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் பன்னீர் ஊற்றி நான்கு குலைத்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் பூஜை அறையில் சுவற்றில் அல்லது வீட்டின் எந்த இடத்தில் நான் வேண்டுமானாலும் “ஓம் ஸ்ரீ அக்ஷயம்” என்ற வார்த்தையை அந்த மஞ்சளை தொட்டு எழுதிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பண கஷ்டம்

பின்பு தீபத்தை ஏற்றி மனதில் உங்கள் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி தாயாரை நினைத்து ‘எங்கள் வீட்டில் செல்வ வளம் குறையாமல் இருக்க வேண்டும் என மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்’ இதே போல் தினந்தோறும் சுத்த பத்தமாக பயபக்தியோடு தீபம் ஏற்றுவதற்கு முன்பாக ஏற்கனவே எழுதிய வார்த்தையை துணியால் அழித்துவிட்டு. மீண்டும் மஞ்சளை தொட்டு “ஒம் ஸ்ரீ அக்ஷயம்” என்ற வார்த்தையை எழுதி அதன் பின் விளக்கை ஏற்றி இதுபோல் தெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு வந்தால். முதலில் உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் இருந்தால் உங்கள் பணம் கஷ்டம் தீர்ந்து அள்ள அள்ள குறையாத அளவிற்கு செல்வம் சேரும்.

கடன் சுமை தீரும்

மேலும் உங்கள் வீட்டில் உள்ள எழுத தெரிந்த குழந்தைகளை வைத்து இந்த வார்த்தைகளை நீங்கள் எழுதினால் இந்த பூஜை இன்னும் சிறப்பாக இருக்கும். இப்படி இந்த பூஜையை நீங்கள் தினசரி கடைபிடித்து வந்தால் பணம் இல்லாதவர்களிடம் பணம் வந்து சேரும், அதிக அளவு கடன் சுமையை சுமப்பவர்களுக்கு ஒரு விடிவு காலம் வரும், உங்கள் வீட்டில் பல நாட்களாக சுபகாரியங்கள் தடைப்பட்டு கொண்டிருந்தாள் அந்த தடைகள் எல்லாம் நீங்கி அந்த சுப காரியங்கள் நடக்கும். இப்படி இந்த பூஜையை தினசரி கடைபிடித்து வந்தால் போதும் உங்கள் வாழ்வில் பணக்கஷ்டம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here