என்னதான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என் கூட்டு, கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.
இதையும் படியுங்கள் : சுவையான அவரைக்காய் கூட்டு செய்வது எப்படி ?
நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த கொத்தவரங்காய் பொரியல் கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் இந்த பொரியல் கூட்டு இருக்கும். ஆகையால் இன்று இந்த கொத்தவரங்காய் பொரியல் கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கொத்தவரங்காய் பொரியல் | Kothavarangai Poriyal Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- ¼ KG கொத்தவரங்காய்
- 3 tbsp எண்ணெய்
- ½ tbsp கடுகு
- 1 வர மிளகாய்
- 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
- 1 கொத்து கருவேப்பிலை
- ½ கப் தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
- ¼ tbsp மஞ்சள் தூள்
மிக்ஸியில் அரைக்க
- ½ கப் கடலை பருப்பு
- ¼ கப் தேங்காய் துண்டுகள்
- 3 பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் அரை கப் அளவிலான கடலைப்பருப்பை ஒரு முறை தண்ணீரில் அலசி சுத்தப்படுத்திக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு ஒரு மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நாம் எடுத்துக் கொண்ட கால் கிலோ கொத்தவரங்காய்யை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
- பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டீஸ்பூன் அளவில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் அளவு கடுகு உளுந்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு நன்கு பொரிந்தது வந்தவுடன் ஒரு வர மிளகாய், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் நாம் நறுக்கிய கொத்தவரங்காய் சேர்த்து அதனுடன் அரை கப் தண்ணீர், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு கடாயை மூடி விடுங்கள் இப்படி ஒரு 7 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
- இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் நம் ஊற வைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் சேர்த்து. அதனுடன் கால் கப் அளவு தேங்காய் துண்டுகள், மூன்று பச்சை மிளகாய் மற்றும் கடலைப்பருப்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைசா அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின் கடாயில் உள்ள கொத்தவரங்காய் நன்கு வதங்கி வந்ததும் அதனுடன் அரைத்த கடலை பருப்பை கொத்தவரங்காயின் மேல் சிறிது சிறுதாக தூவி விட்டு கிளறி விடாமல் கடாயை மூடி வைத்து விடுங்கள் ஒரு இரண்டு நிமிடம் கழித்து கடலை பருப்பு நன்றாக வெந்து வரும்.
- அதன் பிறகு கடலைப்பருப்பை உடைத்து கொத்தவரங்காயுடன் சேர்த்து கிளறி விடுங்கள். பின் சிறிது நேரம் தீயை குறைத்து வைத்து வதக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான கொத்தவரங்காய் பொரியல் இனிதே தயாராகிவிட்டது.