உங்கள் வீட்டில் பணம் பெருகி கொண்டே இருக்க வேண்டுமா ? அசிங்க படுத்தியவர் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டுமா ?

- Advertisement -

ஒருவர் அறிவையும் மதிப்பையும் தீர்மானிப்பது கல்விதான் என்று பலரும் நம்மிடம் கூறியிருந்தாலும். நிசத்தனமான உண்மை என்னவென்றால் யார் ஒருவரிடம் காசு பணம் உள்ளதோ அவர்கள் தான் இந்த சமூகத்தில் போற்றப்படுவார்கள். என்னதான் பெரிய பெரிய படிப்புகள் படித்திருந்தாலும், ஆனால் முறையாக கல்வி பயிலாத ஒருவனிடம் பணம் இருந்தால் அவனை தான் இந்த சமூகம் தூக்கி வைத்து கொண்டாடும். இதற்கெல்லாம் காரணம் அவர்களின் முன்னோர்கள் செய்து வந்த புண்ணியமாக இருக்கும். இருந்தாலும் பணம் இல்லாமல் தினந்தோறும் வாழ்க்கையுடன் போராடி பெரும் மன வருத்தத்துடன் உள்ளவர்களுக்கு பணம் காசு வந்து சேர்ந்து செல்வந்தர்களாக மாறுவதற்காக குபேரனை பூஜை செய்து இந்த ஹோமம் செய்தால் நீங்களும் செல்வந்தர் ஆகலாம். அதனால் இந்த குபேர பூஜை பற்றி நாம் இந்த ஆன்மீக தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

லட்சுமி குபேர ஹோமம்

ஆம், சக்தி வாய்ந்த இந்த பூஜையின் பெயர் “லட்சுமி குபேர ஹோமம்” இந்த ஹோமத்தை செய்பவர்கள். முதலில் ஒரு புரோகிதரை அணுகுங்கள். புரோகிதர் இந்த ஹோமத்தை செய்பவரின் ஜென்ம நட்சத்திரத்தை பார்த்து அவருக்கு உண்டான யோகம் மற்றும் திதி என்று கைகூடி வருகிறதா அந்த நாள் பார்த்து தேதி குறித்து தருவார். அந்த நாட்களில் இந்த லட்சுமி குபேர ஹோம பூஜை செய்ய வேண்டும் மேலும் இந்த பூஜையை வெள்ளிக்கிழமைகளிலும் அட்சய திருதி நாட்களில் செய்வது இன்னும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

- Advertisement -

பூஜை

இந்த லட்சுமி குபேர பூஜை செய்யும் நபரின் குடும்பத்தினர்களும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு யாகம் செய்யும் இடத்திற்கு வந்து அமர்ந்து கொள்ள வேண்டும். இந்த லட்சுமி குபேர ஹோம பூஜை செய்வதற்கு முதலில் 16 நெய் தீபங்களை ஏற்றி மகாலட்சுமியை வில்வ இலைகளை வைத்து, குபேர பகவானை நம் வீட்டில் வைத்திருக்கும் தங்க காசுகள், வெள்ளி காசுகள் போன்றவற்றை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த பூஜை செய்யப்படும் குபேர பகவானுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும். பின்பு இந்த லட்சுமி குபேர ஹோம பூஜை நல்ல படியாக முடிந்தவுடன் நெய் வைத்தியமாக படைக்கப்பட்ட சர்க்கரை பொங்கலை பிரசாதமாக கொடுத்துக் கொள்ளுங்கள்.

செல்வந்தர் ஆகலாம்

எப்படி இந்த பூஜையை நன்கு அனுபவம் வாய்ந்த புரோகிதர்கள் மூலமாக நாமும் முழு நம்பிக்கையுடனும் இந்த பூஜையை செய்து முடித்தால். இந்த சமூகத்தில் நம்மளை ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு போகும், கடனில் மூழ்கிக் கிடந்த நபர்கள் அதை விட்டு வெளியே வருவார்கள், சுமக்க முடியாத கடனை நீங்கள் வைத்திருந்தாலும் எப்படியாவது கஷ்டப்பட்டு இந்த பூஜையை செய்து முடிந்தால் உங்களுக்கு தேவையான பணம் கிடைத்து நீங்கள் செல்வந்தர் ஆகலாம். இந்த சமுதாயத்தில் உங்கள் நிலை எந்த அளவிற்கு உயரும் என்றால், இத்தனை நாட்கள் உங்களிடம் பேசாமல், நீங்கள் பேச வந்தாலும் உங்களை அவமானப்படுத்தி சென்றவர்கள் முன்பாக வாழ்ந்து காட்டும் அளவிற்கு உங்களை இந்த சமுதாயத்தில் கௌரவம் வாய்ந்த இடத்திற்கு கூட்டிச் செல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here