உங்கள் வருமானம் உயர வேண்டுமா ? பணம் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? தென்கிழக்கு திசையில் இந்த பொம்மை மட்டும் வையுங்கள் போதும்!

- Advertisement -

இந்த உலகில் பணம் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்பது சொல்வதை விட இந்த பணம் இல்லாமல் ஒருவன் இந்த உலகில் வாழ்வதற்கு தகுதியற்றவனாக இருக்கிறான் என்று நான் சொல்லவில்லை இந்த உலகம் சொல்கிறது. நாம் இந்த நிலையில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் முன்பெல்லாம் நமக்கு ஏதாவது பொருள் தேவை என்றால் மட்டுமே செலவு செய்வோம். ஆனால் இப்போது செலவு செய்வதை ஒரு பொழுதுபோக்காக பலர் செய்து கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் பலர் வாழ்க்கை இப்படி அமையவில்லை நாம் அவர்கள் வாங்கும் வருமானத்தை விட அவர்கள் வீட்டிற்காக செய்யும் செலவுகள் அதிகமாக இருக்கின்றது.

-விளம்பரம்-

குபேர பொம்மை

இப்படி தனக்கு வருக்கின்ற வருமானத்தை விட செலவுகள் அதிகமாக உள்ளது இப்படி என் செலவுக்கேற்ற வருமானம் கிடைக்கவில்லையே பணம் என்னிடம் சேரவே இல்லையே என்ன புழம்பி கொண்டு இருப்பவர்களுக்காக தான் இந்த பதிவு. உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா இதை மட்டும் செய்யுங்கள் போதும்.இந்த உலகின் ஒட்டு மொத்த செல்வத்திற்கும் சொந்தக்காரி மகாலட்சுமி என்று கூறுவார்கள். ஆனால் அந்த செல்வங்களை எல்லாம் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பும் செல்வ அதிபதி குபேரரிடம் தான் உள்ளது. பொதுவாக குபேர பொம்மையை பலர் அழகுக்காக வாங்கி வீட்டில் வைப்பார்கள் ஆனால் அப்படி வைக்கும் குபேர பொம்மை கூட நம் சரியான இடத்தில் வைப்பதனால் நம் வீட்டில் பணம் சேரும். இதைப்பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் பாருங்கள்

- Advertisement -

கிழக்கு திசை

பொதுவாக வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்டமான திசை என அனைவரும் சொல்வார்கள். எனவே குபேர சிரித்தப்படி எப்படி இருக்கும் ஒரு பொம்மையை வாங்கி உங்கள் வீட்டின் கிழக்கு திசை பார்த்தவாறு நீங்கள் வைக்கும் போது உங்களது குடும்பத்தை உள்ள நபர்களின் இடையில் ஒற்றுமை அதிகரிக்கும் அதேபோல் வீட்டின் சந்தோசமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

அதேபோல் கிழக்கு திசையில் வைப்பதனால் மேலும் ஒரு லாபம் இருக்கிறது உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வாக்குவாதங்கள் இதுபோன்று ஏற்பட்டு கொண்டே இருக்குமானால் நொடி பொழுதில் இதெல்லாம் தீர்ந்து விடும். அதோட மட்டுமில்லாமல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் உருவாகும். வீட்டின் செல்வ வளம் நிற்காமல் பெருகிக்கொண்டே இருக்கும்.

தென்கிழக்கு திசை

இப்படி நீங்கள் வாங்கி வைத்திருக்கும் குபேர பொம்மையை உங்கள் வீட்டில் வரவேற்புை அறை, படுக்கையறை, ஹால் சமையலறை என எங்கு வேண்டுமானாலும் உங்க இஷ்டப்படி வைத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் வைக்கும் திசையானது சரியாக இருக்க வேண்டும் குபேரர் பொம்மை தென்கிழக்கு திசையை பார்த்தவாறு வைப்பதன் மூலம் இவ்வளவு காலம் உங்களுடன் இல்லாத அதிர்ஷ்டமும் இனி உங்களுடன் இருக்கும். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் சரி வருமானம் உயரும்.

-விளம்பரம்-

மேலும் குபேரர் சிரித்துக்கொண்டே இருக்கும் இந்த பொம்மையை பார்க்கும் பொழுது உங்கள் மனதில் உள்ள அழுத்தங்கள் எல்லாம் குறைந்துவிடும் மனதும் லேசாகிவிடும். அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு மனபக்குவம் வந்துவிடும். பொதுவாக எந்த ஒரு வேலையும் ஆத்மார்த்தமாக சந்தோசமாக நாம் செய்யும் போது அதற்கேற்ற முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்பார்கள். அது போல தான் நீங்கள் நம்பிக்கையுடன் சந்தோஷமாக இதை செய்து பாருங்கள் இதனுடைய முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும்.