பண வரவு அதிகரிக்க வீட்டின் வடகிழக்கு மூலையில் இந்த பொருளை வைத்தால் போதும்!

- Advertisement -

இப்போதெல்லாம் நாம் நம்முடைய ஒரு சிறிய தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் என்றாலும் அதற்காக அதிக அளவு பணம் தேவைப்படும் அதற்கு காரணம் நாம் வாங்க நினைக்கும் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகும். முன்பெல்லாம் குறைவாக நமக்கு பணம் வந்தாலும் நம் வாங்க நினைக்கும் பொருட்களின் விலை குறைவாக தான் இருக்கும் ஆனால் இப்போது ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞன் ஒரு இருசக்கர வாகனம் வாங்க நினைத்தால் கூட அதற்காக லட்ச கணக்கில் பணம் தேவைப்படும் அதற்காக வீட்டில் இருக்கும் பொருட்களை அடமானம் வைக்க நினைப்போம் அல்லது கடன் வாங்க வேண்டிய நிலைமையை தான் உண்டாக்கும்.

-விளம்பரம்-

பணம் வசியம்

ஒரு இருசக்கர வாகனம் வாங்குவதற்கே நாம் இவ்வளவு தூரம் யோசிக்க வேண்டி இருக்கிறது. இதே போல் நமது வீட்டில் சுப காரியங்கள் அல்லது வீட்டில் இருக்கிறவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்த்தால் அதற்கு எவ்வளவு பணம் செலவாகும் என்று நினைத்தாலே நாம் ஒரு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விடுவோம். நமக்கு வரும் வருமானம் குறைந்த அளவு இருக்கும் பட்சத்தில் நாம் செலவு செய்யும் பணம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நம் வீட்டில் ஒரு கல்யாணம் போன்ற சுப காரியங்கள் வைக்க நினைத்தால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் ஆனால் கடன் வாங்க கூடாது வீட்டில் உள்ள பொருட்களின் அடமானம் வைக்க கூடாது என்றால் பணத்தை தான் வசியம் செய்ய வேண்டும் அதைப்பற்றி தான் நான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காண உள்ளோம்.

- Advertisement -

பரிகாரம்

பணத்தை வசியம் செய்வது என்றவுடன் வேறு ஏதும் நினைக்காதீர்கள் இந்த உலகின் ஒட்டு மொத்த செல்வத்தையும் பாதுகாக்க கூடிய குபேரரை வசியம் செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரம் தான். இது இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்காக 1 – ஜாதிக்காய், 3 – ஏலக்காய், 3- கிராம்பு, ஒரு ஒரு ரூபாய் நாணயம் இந்த நான்கு பொருட்களும் தேவைப்படும். அதனுடன் ஒரு சதுர வடிவம் உள்ள மஞ்சள் துணியை எடுத்து கொண்டு, மேலே சொன்ன பொருட்களை ஒன்று ஒன்றாக வத்து கடைசியில் குபேரரை வசியம் செய்ய ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து, ஒரு மஞ்சள் நிற நூலை வைத்து கட்டி உங்கள் வீட்டில் வட கிழக்கு மூலையில் யாருக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள்.

முடிச்சை எங்கு வைக்கலாம்

இப்படி நீங்கள் வைத்திருக்கு முடிச்சை வடகிழக்கு மூலையில் வைக்கும் போது அதை ஏதேனும் ஒரு டப்பா வில் போட்டு வைத்துக் கொள்ளலாம் ஆனால் அந்த டப்பாவை மூடி வைத்து கூடாது. இல்லையென்றால் ஏதாவது ஒரு ஆணியில் மாட்டி வைக்கலாம். இப்படி நாம் வைத்திருக்கும் இந்த முடிச்சில் இருந்து வெளியேறும் நேர்மறை ஆற்றல் உங்களது வீடு முழுக்க நிரம்பி வழியும் பொழுது. உங்கள் வீட்டில் உள்ள பணத்தடைகள் அனைத்தும் நீங்க பணவரவு சீராக அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதை போல் உங்கள் வீட்டில் பண வரவை தடுத்துக் கொண்டிருக்கும் சில கெட்ட சக்திகளை முறியடிக்கும் சக்தி இந்த மஞ்சள் நிற முடிச்சுக்கு உண்டு.

ஜாதிக்காயின் மகத்துவம்

இப்படி நாம் தயார் செய்து வைத்திருக்கும் முடிச்சை ஆறு மாதத்திற்கு ஒருமுறை எடுத்து உள்ளிருக்கும் பொருட்களை மனிதன் காலடி படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிதாக பொருட்கள் வைத்து மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுங்கள். இப்படி நாம் முடித்து வைத்திருக்கும் முடிச்சில் இருக்கும் ஜாதிக்காயில் மகத்துவம் வாய்ந்த சக்திகள் உள்ளது. நீங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடம், எந்த இடமாக இருந்தாலும் சரி அந்த இடத்தில் ஒரு ஜாதிக்கையை போட்டு வைத்தால் அந்த இடம் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழியும். உங்கள் வீட்டில் இருக்கும் அஞ்சறைப்பெட்டி ஒரு ஜாதிக்காய் போட்டு வைத்தால் உங்கள் வீட்டில் சாப்பாட்டு பிரச்சனை என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. மேலும் நீங்கள் செய்யும் சாப்பாடு வீணாகாமல் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த ஜாதிக்காய் மகத்துவம் வாய்ந்தது

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here