கடன் மேல் கடன் பிரச்சனையில் இருந்து மீள வேண்டுமா ? இந்த ஒரே ஒரு விளக்கு மட்டும் ஏற்றுங்கள் போதும்!

- Advertisement -

பொதுவாக கடன் வாங்குவது மோசமான காரியம் அல்ல ஆனால் நம் வீண் செலவுகளுக்காக லோன் போட்டு அதை கட்ட மென்மேலும் லோன் போட்டு அவதிப்படுவது தான் மோசமான விஷயம். சிலருக்கு கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் என்றால் அவர்களை சொல்லியும் குற்றமில்லை ஏனென்றால் அவர்கள் ஜாதகத்தின் படி அவர் கடன் வாங்கி கஷ்டப்படுவார் என அவர் பிறந்ததுமே எழுதப்பட்டிருக்கும். அதன் மூலம் அவர்களும் தன் வாழ்வில் கடன் மூலம் வரும் பிரச்சனைகளை சந்தித்து கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார். ஆனால் ஆன்மீகம் ரீதியாக இதற்கு ஒரு பரிகாரம் இருக்கிறது அதை எப்படி செய்வது என்ன பரிகாரம் என்பதை நானும் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

குத்து விளக்கு

பொதுவாக நாம் வீட்டில் ஏற்றும் அதிகபட்ச விளக்கு காமாட்சி விளக்காக தான் இருக்கும். குத்து விளக்கு நம் வீட்டில் வைத்திருப்போம் ஆனால் என்றாவது விசேஷ நாட்களில் மட்டும் அதை எடுத்து தேய்த்து, கழுவி, சுத்தம் செய்து பயன்படுத்துவதற்கு தயாராக வைத்திருப்போம். குத்து விளக்கு என்று எடுத்துக் கொண்டால் அதில் 5 முகங்கள் இருக்கும் இந்த ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கில் ஐந்து முகத்திலும் திரி போட்டு விளக்கேற்றி வைத்தால் உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து சுபிக்ஷம் நிலையாக நீடித்து இருக்கும். நீங்க ஒரு சில காரியங்கள் செய்யும்போது ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் எல்லாம் கூட நீங்கி உங்களுக்கு வெற்றியை பெற்று தரும்.

- Advertisement -

நான்கு முக விளக்கு

ஆனால் இந்த குத்துவிளக்கில் நான்கு முகங்களில் மட்டும் திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்தால் எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சினையாக இருந்தாலும் நீங்கி விடும் என் நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் நான்கு முகங்களில் திரி போட்டு விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டு வருபவர்களுக்கு வீட்டில் பணம் பொருட்கள் சேர்ந்து கொண்டே போகும். கடன் தொல்லைகள், தேவையற்ற பண சிக்கல்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்வதற்கு இந்த நான்கு முக விளக்கு வழிபாடு தீர்வாக இருக்கும்.

கடன் கரைந்து போகும்

அதுபோல இந்த நான்கு முக விளக்கை நீங்கள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஏற்றி மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து வழிபடலாம். மேலும் இரண்டு குத்து விளக்குகளை சுத்தம் செய்து நன்றாக தேய்த்து கழுவி அதற்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து பின்னர் தலைப்பகுதியில் பூ சுற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி நான்கு திரிகளை போட்டு நீங்கள் விளக்கு ஏற்றி வைக்கும் பொழுது உங்கள் ஜாதகத்தில் இருக்கும் குறைபாடுகள் நீங்கி உங்களின் இஷ்ட தெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைத்து உங்கள் பிரச்சனைகள் எல்லாம் காற்றோடு காற்றாக கரைந்து போகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உங்களது கடன் தொல்லைகள் பண பிரச்சினைகள் நீங்கி நிம்மதியான ஒரு வாழ்வை வாழ இது வழி செய்யும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here