வீடு முழுவதும் பணம் நிரம்பி இருக்க வேண்டுமா ? வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்து பாருங்கள்!

- Advertisement -

இன்றைய நாட்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினை என்றால் அது பண பிரச்சனை தான். அனைவரும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் நமது வீட்டிலும் பணம் சேர்ந்து இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். அதற்காக என்ன தான் அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவர்களுக்கு வரும் பணம் ஏதாவது ஒரு வகையில் தடைப்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் இன்று நாம் வீடு முழுவதும் பணம் நிரம்பி இருப்பதற்கு மற்றும் பணப் பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும் ? அதற்கு மகாலட்சுமி தாயார் மற்றும் குபேரரின் அருள் வேண்டும் இந்த இரண்டு பேரின் அருளை எப்படி ஒன்று சேர பெறுவது என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பண தேவை

இந்த உலகில் பணம் தேவை என்பது எல்லோருக்கும் இருக்கும் அது பணக்காரனாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி அது அவர்களின் தேவையை பொறுத்து. பணக்காரனாக இருக்கும் ஒருவனக்கு கோடிக்கணக்கில் பண தேவை இருக்கும். ஏழையாக இருக்கும் ஒருவனுக்கு ஆயிரக்கணக்கில் பண தேவை இருக்கும் ஆக மொத்தம் பண தேவை என்பது எல்லாருக்கும் இருக்க தான் செய்கிறது. மேலும் “கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும்” என்று ஒரு சிலர் பேச்சு வழக்கில் கூறுவார்கள். அப்படி உங்களுக்கு கூரையை பிய்த்து கொண்டு பணம் கொட்ட வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் குபேரர் வாசம் செய்தாலே போதும். அதனுடன் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருந்தால் போதும் உங்கள் வீட்டிலும் கூரையை பிய்த்து கொண்டு பணம் கொட்டும்.

- Advertisement -

சுமங்கலி பெண்கள்

மகாலட்சுமி அருளை பெறுவது மிகவும் எளிமையான காரியம் தான் பொதுவாக சுமங்கலி பெண்களின் மனம் குளிர்ந்தாலே போதும் மகாலட்சுமி அருளை பெற்று விடலாம்
அதனால் உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்கள் வந்தால் முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள் அவர்கள் வயறு குளிர்ந்து விட்டால் போதும் லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு கிடைக்கும். அதுபோல் உங்கள் வீட்டின் அருகில் காய்கறி விற்பதற்கு, பழம் விற்பதற்கு வரும் பெண்களுக்கு இதே போல் தண்ணீர் குடிக்க கொடுக்கலாம் குறிப்பாக வெள்ளிக்கிழமை தவறாமல் நீங்கள் செய்து வர வேண்டும்.

மொச்ச கொட்டை

எப்படி வெள்ளிக்கிழமை சுமங்கலி பெண்களுக்கு தண்ணீர் கொடுத்தால் மகாலட்சுமி அருள் கிடைக்குமோ அதே போல் வீட்டிற்கு வரும் பெண்களுக்கும் மஞ்சள் கூடும் குங்குமம் கொடுத்தாலும் கூட மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். மேலும் வெள்ளிக்கிழமை தினத்தில் மொச்சகொட்டை பயிறு வைத்து சுண்டல் செய்து அதை பூஜை அறையில் மகாலட்சுமி நெய்வேத்தியமாக படைத்துை வைத்து. பின் பூஜை முடிந்தது வீட்டில் உள்ள அனைவரும் பிரசாதமாக சாப்பிடும்போது மகாலட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

வளர் பிறை வெள்ளிக்கிழமை

அதேபோல் மகா விஷ்ணுவின் இதயத்தில் குடி கொண்டிருக்கும் மகாலட்சுமியை குளிர வைப்பதற்காக தினமும் உங்களது வீட்டில் சுப்பர வாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்றை பாடலாக பாடலாம் அல்லது உங்கள் ஃபோனில் பாட்டாக போட்டு விடலாம். மேலும் ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் பசுவிற்கு நீங்கள் உணவு அளித்தால் அதன் மூலம் மகாலட்சுமி தேவியின் மனம் குளிர்ந்து உங்கள் வீட்டிற்கு ஒரு லட்சுமி கடாட்சம் உண்டாகும். அதேபோல் நீங்கள் வெள்ளிக்கிழமை குளிக்கும்போது அந்த குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு பசுவின் கோமியத்தை கலந்து குளிப்பதன் மூலம் மகாலட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

-விளம்பரம்-

குபேர பகவான்

உங்கள் வீட்டில் குபேரர் குடியிருக்க வேண்டுமென்றால் உங்களின் வீட்டில் நிச்சயமாக ஊறுகாய் இருக்க வேண்டும் ஏனென்றால் குபேர பகவான் ஒரு ஊறுகாய் பிரியர் ஆவார். அதனால் வீட்டில் விதவிதமான ஊறுகாய் வைத்திருக்கலாம் குறிப்பாக நெல்லிக்காய் ஊறுகாய் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் குபேர பகவான் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது. இதற்கு முன் நாம் பார்த்த விஷயங்களை அனைத்து விட முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று அவர்களை வழிபடும் முறையில் வழிபட்டு என் பொங்கல் வைத்து பூஜை செய்வதன் மூலம் குல தெய்வத்தின் அருளை பெற முடியும். நீங்கள் இவ்வளவு விஷயம் செய்து குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் பிரோஜனம் இல்லை. இதை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனையை கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here