வீட்டிற்கு பணம் தடை இல்லாமல் வந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

நம் வாழ்வில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணம் எவ்வளவு முக்கியம் என்பது சிறு குழந்தைக்கு கூட இன்றைய நாட்களில் தெரிந்து கொள்கிறார்கள். அப்படி நாம் வீட்டிற்கு வரும் பணம் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைக்கு போய் சம்பாதிப்பவர்கள் அல்லது தொழில் செய்து வரும் லாபத்தின் மூலமாகத்தான் பணம் வீட்டிற்கு வரும். இப்படி வீட்டிற்கு வரும் பணத்திற்கு இடையூறாக பல பிரச்சினைகள் நடக்கும் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் வரலாம், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம் இது போன்று பிரச்சனைகளின் மூலமாக பணம் தடைபடும். அப்பொழுது நாம் பணக்கஷ்டங்களையும் உடன் கடன் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் தடை இல்லாமல் நம் வீட்டில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

மகாலட்சுமி

இப்படி நாம் வீட்டிற்கு வரும் பணம் தடை இல்லாமல் புழக்கம் ஆகிக்கொண்டே இருப்பதற்கு லட்சுமி குபேர பூஜையை செய்து வந்தாலே போதும். நமது வீட்டிற்கு வரும் பணம் எந்த தடையும் இல்லாமல் எப்பொழுதும் போல் வந்து கொண்டிருக்கும் ஏன் இந்த பூஜையை செய்கிறோம். என்றால் நாம் சம்பாதிக்கும் பணம், சொத்து, தங்கம், பொருள் என அனைத்து செல்வத்திற்கும் சொந்தக்காரி மகாலட்சுமி தேவி மட்டுமே. அப்படி அந்த மகாலட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் கிடைத்தாலே போதும். நம் வீட்டில் பணக்கஷ்டம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது அனைத்தும் நம்மை தேடி வரும்.

- Advertisement -

குபேரர்

அப்படி இந்த மகாலட்சுமி தேவியின் அனைத்து செல்வங்களுக்கும் பாதுகாவலனாக இருப்பவர்தான் குபேர பகவான். மகாலட்சுமி தேவியை போல குபேர பகவானின் அருளும் நமக்கு கிடைத்து விட்டால் போதும் நமது வாழ்க்கையில் வறுகை என்ற ஒன்று இருக்கவே இருக்காது. அதனால் இந்த இரண்டு தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைப்பதற்கு வருடத்தில் ஒரு முறையாவது ஒரு நாள் இந்த லட்சுமி குபேர பூஜை செய்தால் போதும் உங்கள் வீட்டிற்கு செல்வம் தேடி வரும் உங்கள் வீட்டில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் பணம் தடை இல்லாமல் வீடு வந்து சேரும்.

லட்சுமி குபேரே பூஜை

இந்த பூஜையை செய்வதற்காக மகாலட்சுமி தேவியின் திருவுருவப்பட மற்றும் குபேர பகவானின் உருவச் சிலையையும் வடக்கு திசையை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மகாலட்சுமி தேவியின் படத்திற்கும் குபேரரின் சிலைக்கும் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து. பின் பூவை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். குபரேரின் சிலை வலது பக்கத்தில் குபேர கட்டம் வரைந்து குபேர கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பின் நாம் வரைந்த குபேர கோலத்தின் நடுவே மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, பூவை வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

நைவேத்தியம்

அதன் பின்பு குபேர கட்டத்தில் நான்கு மூலைகளிலும் ஸ்ரீ என்ற வார்த்தையை எழுதிக் கொள்ளுங்கள். பின்பு நாம் வரைத்த ஒவ்வொரு கட்டத்திலும் எண்களை எழுதி அதில் மலர் வைக்க வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் 108 ஐந்து ரூபாய் நாணயங்களை நிரப்பி கட்டத்தின் மீதும் பூக்களை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மகாலட்சுமியின் அம்சமான நெல்லிக்கனி மற்றும் மா, பல, வாழை போன்ற பழங்களையும் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இதனுடன் கூடவே ஏதாவது இனிப்பு பொருளையும் வைத்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

மந்திரம்

பின் கடைசியாக வீட்டின் நிலை வாசலில் வலது புறம் மஞ்சள் விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு குபேர விளக்கு ஏற்றி பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதில் நாம் வைத்திருக்கும் 108 ஐந்து ரூபாய் நாணயங்களை ஒன்று ஒன்றாக எடுத்துப் போட்டு வேண்டும். அப்படி நம் நாணயங்களை போடும்போது “ஓம் லட்சுமி குபேராய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே பூஜை செய்ய வேண்டும். அப்பொழுது நீங்கள் மகாலட்சுமி மற்றும் குபேர பகவானை மனதாரர நினைத்து. உங்களின் பணக்கஷ்டம் தீர வேண்டும், செய்யும் தொழில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும், வீட்டில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று மனஉருகி பிரார்த்தனை செய்து கொண்டால் உங்கள் வீட்டிற்கு பணம் தடை இல்லாமல் வந்து கொண்டே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here