சொந்த வீடு வாங்கவே முடியாது என்று நினைப்பவர்கள் வீடு வாங்க வீட்டின் தென் பகுதியில் இதை வைத்து பாருங்கள்!

- Advertisement -

ஒரு சிலரிடம் உங்களின் வாழ்நாள் கனவு என்னவென்று கேட்டால் ஒவ்வொருவரும் தங்களின் கனவுகளை கூறுவார்கள். ஆனால் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் சிறுவயதில் இருந்து வாழ்ந்து வரும் மக்களிடம் உங்களுடைய வாழ்நாள் கனவு என்னவென்று அவர்களிடம் கேட்டால். 100ல் 90 சதவீத நபர்கள் சொல்வது சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது தான் என் கனவு என்று சொல்வார்கள். அவர்களின் வாழ்க்கையின் லட்சியமாகவே அதான் இருக்கும். அந்த அளவிற்கு சொந்த வீடு இல்லாமல் அவர்கள் பட்ட துயரத்தை விவரிக்கவே முடியாது. அதனால் சொந்த வீடு இல்லாதவர்கள் வேகமாக நிலம் அல்லது வீடோ வாங்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணப் போகிறோம்.

-விளம்பரம்-

பணம் இருந்தால் போதாது

நம்மிடம் பணம் இருந்து விட்டால் மட்டும் நமக்கென்று சொந்தமாக நிலம், வீடு, சொத்துக்கள் போன்றவை வாங்கி விட முடியாது பணம் இருந்தாலும் இதையெல்லாம் நாம் வாங்குவதற்கு நம்மிடம் அதற்கான யோகம் இருக்க வேண்டும். ஏன் உங்களுக்கு தெரிந்த நபர்களை பலர் கையில் பணம் வைத்திருந்தாலும் அவர்களுக்கு என்ன ஒரு வீடும் நிலவும் வாங்குவதற்கு பல காலமாக முயற்சித்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு சிலர் வீடு கட்டுவதற்கு நிலம் வாங்கி இருப்பார்கள் ஆனால் அந்த வீடு கட்டிக் கொண்டிருக்கும் போதே பாதியில் நின்று விடும் ஏதாவது பிரச்சனை வரும் எப்படி வீடு கட்டும் போதும் இடையூறுகள் வந்து கொண்டே இருக்கும். இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

- Advertisement -

அஞ்சநேயர் வழிபாடு

முதலில் நமக்கு இருக்கும் இந்த வீடு வாங்குவது விற்பது நிலம் வாங்குவது இருப்பது என இது தொடர்பான எந்த காரியங்களும் நமக்கு வெற்றியில் அமைய வேண்டும் என்றால் அதற்கு ஆஞ்சநேயரே தவறாமல் செவ்வாய்க்கிழமை வழிபட்டு பூஜை செய்து வர வேண்டும். அப்படி நீங்கள் ஆஞ்சநேயருக்கு செய்யும் பூஜை அவர் ஆலயத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது உங்கள் வீட்டில் ஆஞ்சநேயர் படம் இருந்தால் அதற்கு பூ வைத்து படையிலாக ஏதாவது ஒரு ஸ்வீட்டை வைத்து நீங்கள் ஆஞ்சநேயரே தினந்தோறும் வணங்கி வரும் போது. உங்களது வீடு நிலம் வாங்குவதற்கான யோகம் கைகூடி வரும்.

வயிரார உணவு கொடுங்கள்

அதேபோல் உங்களுக்கு நிலம், வீடு, வாங்குவதற்கான யோகம் கைகூடி வருவதற்கு சனிக்கிழமை தினம் அன்று உங்களால் முடிந்த அளவிற்கு வேலை எளியவர்களுக்கு வயிராக உணவு வாங்கி கொடுங்கள் இல்லை நீங்கள் தொழில் வியாபாரம் இது போன்ற செய்பவராக இருந்தால் உங்கள் இடத்திலேயே வேலை செய்பவர்களுக்கு வயிறு நிறையும்படி உணவு வாங்கி கொடுங்கள். இதை செய்யும் போது ஏதோ கடமைக்காக செய்யாமல் நீங்கள் மனதார செய்யும்போது உங்களுக்கு வீடு நிலம் வாங்கக்கூடிய யோகம் சீக்கிரமாகவே கிடைக்கும்.

ஸ்வஸ்தி

நம் ஆன்மீகத்தில் சில மந்திர வார்த்தைகள் மற்றும் சின்னங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. உதாரணமாக ஓம், ஸ்ரீம், ஸ்வஸ்தி போன்றவை. இதில் இந்த ஸ்வஸ்தி சின்னத்தை நீங்கள் உங்கள் வீட்டில் தெற்கு பகுதியில் வரைந்து வைத்தாலும் அல்லது இப்போதெல்லாம் கடைகளில் ஸ்டிக்கராகவே கிடைக்கின்றது அதை வாங்கி ஒட்டி வைத்தாலும் சரி உங்களுக்கு வீடு, நிலம் வாங்கக்கூடிய யோகம் கூடுவதோடு உங்கள் வீட்டின் பணவரவை அதிகரித்து உங்கள் வீட்டில் பண புழகத்தை அதிகரிக்கும். பல நாட்களாக வீடு நிலம் வாங்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் இந்த ஸ்வஸ்தி சின்னத்தை வீட்டில் வைத்து பாருங்கள்.

-விளம்பரம்-

மகா லட்சுமி, துளசி வழிபாடு

அதேபோல் செவ்வாய்க்கிழமையில் மகாலட்சுமி தாயார் மனதார நினைத்து, சிவப்பு நிற மலரால் பூஜை செய்து வந்தாலும் வீடு நிலம் வாங்க கூடிய யோகம் உங்களுக்கு கூறி வரும் மகாலட்சுமி தாயாரின் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டில் இருந்தே வழிபட்டு வாருங்கள் அதேபோல் உங்கள் வீட்டில் தென்கிழக்கு மூலையில் துளசி செடி அல்லது துளசி மாடம் வைத்து நீங்கள் அதற்கு விளக்கு ஏற்று வழிபட்டு வருவதன் மூலம் வீடு மூலம் வாங்கும் யோகம் உங்களைத் தேடி வரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனர். இந்த துளசி வழிபாட்டை காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டும். அதனால் பல நாட்களாக வீடு நிலம் வாங்க நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் நம்பிக்கையுடன் செய்து வாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here